districts

img

மக்கள் கவனத்தை ஈர்த்த கிராம சபை

நாமக்கல், நவ.1- நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன் றியம், அக்ரஹாரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராம சபை கூட்டம் புதனன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி  மன்றத் தலைவர் வசந்தி வெங்கடாசலம் தலைமை வகித் தார். தருமபுரி பென்னாகரம் வட்டம், தித்தியோப்பன அள்ளி ஊராட்சி,  ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சிகள் தின கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி,  பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, பென்னா கரம் ஒன்றிய குழுத்தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், உதவி  இயக்குநர் (ஊராட்சிகள்) அ.மாலா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் க.விஜயா, பென்னாகரம் வருவாய் வட் டாட்சியர் சௌகத் அலி, பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா, தித்தியோப்பஅள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் சபரிநாதன், துணைத்தலைவர் மாதேஸ் உட்பட வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  தருமபுரி மாவட்டம், செம்மாண்டகுப்பம் ஊராட்சியில் ஊராட்சிமன்றத் தலைவர் பி.பானுபூமணி தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி யில் நடைபெற உள்ள வளர்ச்சி பணிகள் மற்றும் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  ஈரோடு சத்தியமங்கலம், மாக்கினாங்கோம்பை ஊராட்சி மன்ற  வாளாகத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்றத்  தலைவர் அம்மு ஈஸ்வரன் தலைமையில், வட்டார வளர்ச்சி  அலுவலர் சாந்தமணி முன்னிலையில் நடைபெற்றது. இதில், 10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைதொடர்ந்து, நோய் தொற்று காலம் மற்றும் அனைத்து  நாட்களிலும்  ஊராட்சியை தூய்மைப்படுத்திய தூய்மை பணியாளர்களுக்கு ஆரத்தி எடுத்து, சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. மேலும், தூய்மைப் பணியாளர்களின் நலன் கருதி தனது சொந்த செலவில் காலை உணவு வழங்கு வதாக உறுதி அளித்த ஊராட்சிமன்ற தலைவர், உணவு வழங்குவதையும் தொடங்கி வைத்தார்.  ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவர்  இந்துமதி பாண்டுரங்கசாமி தலைமையில் சிறப்பு கிராம சபை  கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மினி மற்றும் வார்டு  உறுப்பினர்கள், கிராம நிர்வாக அலுவலர், ஆசிரியர்கள், சுகா தார ஆய்வாளர்கள், பொதுமக்கள் திரளானோர் பங்கேற் றனர்.