கோவை, ஏப்.24- கிராமங்களின் நீடித்த நிலையான வளர்ச்சிக்கு கிராம சபை கூட்டம் முக் கியத்துவம் வகிக்கிறது என கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறி யுள்ளார். கோவை மாவட்டம், எஸ்.எஸ். குளம் ஊராட்சி ஒன்றியம், வெள்ளா னைப்பட்டி ஊராட்சியில் தேசிய பஞ்சா யத்து தினத்தினை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா தலைமையில் ஞாயி றன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் பேசுகையில், கிராம சபை என்பது நீடித்த நிலையான வளர்ச் சியை தருவதாக உள்ளது. மேலும், பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் தங்களது குறைகளையும், கோரிக் கைகளையும் முன்வந்து தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை அரசு செயல் படுத்த இயலும். பொதுமக்கள் தங்க ளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக் கள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். இதற்கான சட்ட வழிகளையும், சாத்தியக்கூறுகளை யும் ஆராய வருவாய்த்துறை அலுவ லர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற கோரிக்கைகள் சிக்கதா சம்பாளையம், இடிகரை போன்ற ஊராட்சிகளிலும் பொதுமக்கள் அதிக ளவில் தெரிவித்துள்ளனர். கிராமசபை கூட்டங்களில் பொது வாகக் கூட்டப் பொருட்களைக் காட்டி லும், பொதுமக்களின் கோரிக்கை களை அறிந்து அதற்கேற்ற நடவடிக் கைகளை முன்னின்று செயல்படுத்து வது கிராம சபையின் நோக்கத்தை தெளிவுபடுத்துவதாக உள்ளது. கிரா மங்களின் நீடித்த நிலையான வளர்ச் சிக்கு கிராம சபை கூட்டம் முக்கியத்து வம் வகிக்கிறது. நீண்ட காலமாக உள்ள பிரச்சனைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்ற தீர்வுகளை வழங் கிட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார். முன்னதாக, இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு னர் கவிதா, மகளிர் திட்ட இயக்குனர் சந்திரா, உதவி இயக்குனர் (பொ) பாஸ்கர் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.