கோவை, செப்.13- கேரளாவில் நிபா வைரஸ் பரவலை தொடர்ந்து தமிழக கேரளா எல்லையான வாளையார் சோதனைச் சாவடியில் சுகா தாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கோழிக்கோட்டில் கடந்த மாதம் ஆக.30 ஆம் தேதியன்று காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 49 வயது நபர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். அதேபோல், செப்.10 ஆம் தேதியன்று மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட 40 வயது நபர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார். இவரது மனைவி மற் றும் இரண்டு மகன்கள் மற்றும் 10 மாத குழந்தை என அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதுதொடர்பாக மருத்துவமனை, சுகா தார துறைக்கு தகவல் அளித்த நிலையில், அவர்கள் நிபா வைரஸால் உயிரிழந்திருக்க லாம் என சந்தேகம் எழுந்தது. காய்ச்சலால் இறந்த இரண்டு நபர்களின் மருத்துவ பரி சோதனை வெளியானது. அதில் இருவருக் கும் நிபா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவரது குடும்பத்தினரை தனி வார் டிற்கு மாற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. இவர்களுடன் நேரடி தொடர்பு கொண்ட 75 நபர்களின் பட்டியல் சுகாதாரத்துறையின ரால் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கும் தனி மைப்படுத்தப்பட்டு் சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இதனிடையே, நிபா வைரஸ் பாதிப்பு தமி ழகத்தில் ஏற்படாத வகையில், தமிழக சுகா தாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகின் றன. அந்தவகையில் தமிழக - கேரள எல் லைப் பகுதியில் தமிழக சுகாதாரத்துறையி னர் பரிசோதனை செய்வதற்காக முகா மிட்டுள்ளனர். குறிப்பாக, கோவை மாவட் டத்தில் உள்ள கேரளா - தமிழ்நாடு எல்லை பகுதியான வாளையார் சோதனைச்சாவடி யில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு தீவிர பரிசோனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேர ளம் மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தமிழக சுகா தாரத்துறையினர் சோதனை செய்து வரு கின்றனர்.
மேலும், பொது மக்களுக்கு சளி, காய்ச் சல் போன்ற நோய்த் தொற்றுகள் உள்ளதா?, இல்லையா? என்றும் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றனர். இதே போல், கோவையில் உள்ள கேரள மாநில எல்லைப் பகுதிகளான வேலந்தாவளம், கோபாலபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட 11 சோதனைச் சாவடி களில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்கா ணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சளி, காய்ச்சல் உள்ளிட்ட தொற்று பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த பிறகே தமிழகத்திற் குள் அனுமதிக்கின்றனர். மேலும் இருசக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களில் வரு பவர்களின் முகவரி, செல்போன் எண் உள் ளிட்ட விவரங்களையும் சேகரித்து வருகின்ற னர். இதுதொடர்பாக கோவை மாவட்ட சுகா தாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழ கத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இதுவரை ஏற் படவில்லை. நிபா வைரஸ் தாக்கம் இதுவரை இல்லை என்றாலும் தமிழக-கேரள எல்லை களில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வரு கின்றது. நிபா வைரஸ் குறித்தும் அதன் தாக் கம் குறித்தும் பொதுமக்களுக்கும், மருத்துவ மனைகளுக்கும், மருத்துவமனை ஊழியர் களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது” என தெரிவித்துள்ளனர். இதேபோன்று, நீலகிரி கேரளா எல்லை சோதனை சாவடிகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரபடுத்தப் பட்டுள்ளன. கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தில் நடுகாணி, தாளூர், பட்டவயல், சோலாடி, நம்பியார் குன்னு போன்ற பகுதிகளில் உள்ள கேரளா நீலகிரி எல்லையில் எச்சரிக்கை பாதுகாப்பு நடவ டிக்கைகள் நடந்து வருகிறது சோதனைச் சாவடி வழியாக வரும் வாகனங்கள் அனைத் தும் முழுமையாக சோதனைக்கு பின்பு அனு மதிக்கப்படுகின்றன. மேலும் பேருந்துகளி லும் பாதுகாப்பு நடவடிக்கையாக மருந்துகள் தெளிக்கப்பட்டு நோய் அறிகுறிகள் தென்படு கிறதா? என மருத்துவக்குழு சோதனை செய்து வருகிறது. இதனுடைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று கூட லூரில் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பின்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், கேரளம் மாநிலத்தில் நிபா வைரஸ் எதி ரொலியாக தமிழகத்தில் கேரள எல்லை பகுதிகளை ஒட்டி உள்ள சோதனைச் சாவடி களில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள் ளன கூடலூரில் உள்ள ஐந்து சோதனை சாவடி களிலும் கேரளாவில் இருந்து வரும் வாக னங்கள் முழு சோதனை செய்த பிறகு அனு மதிக்கப்படுகின்றன இதுவரை தமிழகத்தில் நிபா வைரஸ் அறிகுறி எதுவும் இல்லை, என் றார்.