districts

img

மார்க்சிஸ்ட் கட்சியின் 6 ஆண்டு கால போராட்டத்திற்கு வெற்றி

உடுமலை, டிச.26- ஏழை மக்களுக்கு வருவாய்த் துறையின் சார்பில் வழங்கப்பட்ட பட்டாவிற்கான இடம் நீண்ட கால மாக ஒதுக்கப்பாடாமல் இருந்தது.  நிர்வாகத்தின் இந்த போக்கை கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி யதன் விளைவாக மடத்துக்குளம் வருவாய்த்துறை அதிகாரிகள் செவ்வாயன்று நிலம் அளவிடும் பணிகளை துவக்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக் குளம் தாலுகா கொமரலிங்கம் பகுதியில் கடந்த 2017 ஆம் ஆண்டு 110க்கும் மேற்பட்டவர்களுக்கு  வருவாய்த்துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்ட வழங்கப்பட்டது. ஆனால் வழங்கிய பட்டாவிற் கான இடம் ஒதுக்கீடு செய்யப் படவில்லை. பட்டாவின் படி இடம் ஒதுக்கி தரக் கோரி வட்டாட்சியர் முதல் வருவாய்த்துறையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் பட்டா பெற்ற மக்கள் மனு அளித் தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாததால், கடந்த வருடம் உடு மலை கோட்டாட்சியர் அலுவல கத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் தலை மையில் முற்றுகையிட்டு போராட் டம் நடத்தினர். அப்போது, வரு வாய்த் துறையினர், பொது மக்க ளுக்கு பட்டா வழங்கிய இடத்தில் நீதிமன்ற வழங்கு உள்ளதாகவும், அரசின் கவனத்திற்க்கு தெரி யப்படுத்தி விரைவில் நிலம் அளந்து தருவதாக வாக்குறுதி அளித்தனர். வாக்குறுதி அளித் தபடி நிலம் அளவீடு செய்வதற் கான பணிகள் மேற்கொள்ளா ததால், கடந்த மாதம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை யில் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதைத்தொடர்ந்து, டிசம் பர் மாதம் பட்டாவிற்கான இடம் அள வீடு செய்து தரப்படும் என வரு வாய்த்துறை அதிகாரிகள் எழுத் துப்பூர்வமாக எழுதிக் கொடுத்த னர்.  இந்நிலையில், கொமரலிங்கம் பகுதியில் அரசு வழங்கிய இடத் தில் மடத்துக்குளம் துணை வட் டாட்சியர் பாரதி தலைமையில் வரு வாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் நிலத்தைச் சமன்  செய்யும் வேலையை செவ்வா யன்று துவங்கினர். இதில், கட்சி யின் தாலுகா செயலாளர் ஆர்.வி.வடிவேல், தாலுகா குழு உறுப் பினர் பன்னீர்செல்வம், அரசு ஓய் வூதியர் சங்கச் செயலாளர் கருணா நிதி, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் காந்தி ஆகியோர் உடன் இருந்தார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆறு ஆண்டுக்கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.