உடுமலை, ஆக.22- பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து உடுமலை கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், திருமூர்த்திமலையில் உள்ள அமண லிங்கேஸ்வரர் கோவில் மற்றும் அருவி, திருமூர்த்தி அணை உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி, பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சீர்கேடு கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் உடு மலை அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் உடுமலை ஸ்டார் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபட்டனர். அப்போது, இயற்கை காப்போம் திட்டத் தின் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த னர். இந்நிகழ்சியில் ரோட்டரி சங்க எஸ்.சிவபிரகாஷ், உடு மலை தலைவர் எஸ்,கணேசன், கால்நடை மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள், தளி பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.