districts

img

கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம்

நாமக்கல், பிப்.8 நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை சுகா தார, விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்  தாலுகா கபிலர்மலை ஒன்றியம், ஆனங் கூரில் கால்நடை சுகாதார மற்றும் விழிப் புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகா மில் ஆனங்கூர் மற்றும் சுற்றுப்புற கிரா மங்களை சார்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளை முகாமிற்கு கொண்டு வந்து தேவையான சிகிச்சைகளை பெற்று சென்றனர். இம்முகாமில் கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகளை அளித்தல், சினை பிடிக்காத கால்நடை களுக்கு சிறப்பு மலடு நீக்க சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.  சினைபருவத்தில் உள்ள பசு மற்றும்  எருமைகளுக்கு செயற்கை முறை கரு வூட்டல் செய்யப்பட்டன. மேலும், கால்நடை களுக்கு ஊட்டச்சத்து தாது உப்பு கல வைகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.