ஒன்றியத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இடதுசாரிகள் ஆதரவோடு கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்ட நிதி ஒதுக்கீடு செய்தது. இங்கு நிலப்பிரச்சனை வந்தபோது, மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினராக இருந்த பி.ஆர்.நடராஜன் பெரும் முயற்சி மேற்கொண்டு நிலப்பிரச்சனையை முடித்து கட்டுமானப் பணிகள் துவங்கியது. ஐக் கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஐந்தாண்டு காலம் நிறைவடைகிறபோது, இதன் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைந்து திறப்பு விழா விற்கு தயராகி இருந்தது. இதனையடுத்து நடைபெற்ற 2014 தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த னர். மோடி பிரதமரானவுடன் கோவைக்கு வந்த முதல் விசிட்டே இந்த இஎஸ்ஐ மருத்துவக்கல்லூ ரியை திறந்து வைத்ததுதான். நொங்கு பறித்தவன் ஒருவன் நோண்டித்திண்பவன் ஒருவன் என்கிற கதையாக, கோவை இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பாஜக எந்த பங்களிப்பையும் செலுத்தாதபோதிலும், ஏதோ தன்னுடைய ஆட்சிக் காலத்தில்தான் நிதியை ஒதுக்கி மருத்துவம னையை கட்டி முடிக்கப்பட்டதாக மோடி அரசு பில்டப் செய்தது. ஆனால் உண்மை எதுவென்று அறிந்த மக்கள் மோடியின் வாய்ப்பந்தலுக்கு வாய்தா கொடுத்து அனுப்பிவிட்டனர்.
இது போன்றே முந்தைய ஆட்சியில், திட்டம் வகுக்கப் பட்ட திருப்பூர் இஎஸ்ஐ மருத்துவமனை, மோடியின் ஆட்சியில் கட்டுமானப் பணிகள் முடிந்தும், அடிப் படையான வசதிகள் ஏதும் செய்யப்படாததால் கட் டடம் மட்டும் காட்சிப்பொருளாய் நிற்கிறது என் கின்றனர் திருப்பூர் தொழிலாளர்கள். திருப்பூர் பூலுவப்பட்டி பூண்டி சாலையில் கடந்த மாதம் காணொளி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த இஎஸ்ஐ மருத்துவமனைக்கு இன்னும் போதிய உபகரணங்கள் வாங்கப்படா ததால் முழுமையாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தலை முன் னிட்டு அவசரகதியில் திறந்து வைக்கப்பட்டதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பிரதான தொழிலாக உள்ள பின்னலாடைத் தொழில் மற்றும் இதன் சார்பு தொழில்களையும் நம்பி 8 லட்சம் தொழி லாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழ்நாடு மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந் தும் தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகிறார் கள். ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் ஈஎஸ்ஐ சந்தா தொகை திருப்பூர் மாவட்டத்தில் வசூலாகி றது. எனினும் நீண்ட காலமாக இங்கு இஎஸ்ஐ மருத்துவமனை இல்லை. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில், தொழிலா ளர்கள் பயன்பெறும் வகையில் படுக்கை வசதி யுடன் கூடிய ஈஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது தொடர் கோரிக்கை. இதனை தொழிற்சங்கங்கள், உற்பத்தியாளர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். குறிப் பாக இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) மாவட்ட மாநாடுகளில் கோரிக்கை தீர்மானம் நிறை வேற்றியது. மேலும், தில்லியில் உள்ள இஎஸ்ஐ கழகத்திற்கும், அமைச்சர்களுக்கும், அதிகாரிக ளுக்கும் தொடர்ந்து கோரிக்கை கடிதம் அனுப் பியதுடன், தொழிலாளர்களை திரட்டி இயக்கமும் நடத்தியது. 2004 முதல் 2006 வரை சந்திரசேகர ராவ் மத் திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது திருப்பூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவ மனை அமைக்கப்படும் என திருப்பூரில் நடை பெற்ற பொதுக்கூட்டத்தில் உறுதியளித்தார். ஆனால், மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை. இதனையடுத்து, பல் வேறு தொழிற்சங்கங்கள் மருத்துவமனை கட்ட வேண்டும் என தொடர் கோரிக்கையை முன் வைத்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, கடந்த 2012 ஆம் ஆண்டு திருப்பூர் பூலுவப்பட்டி பூண்டி சுற்றுச்சாலையில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்ட இந்து அறநிலை யத்துறையிடமிருந்து, 7.5 ஏக்கர் நிலம் வாங்கப்பட் டது. பின்னர், அங்கு சுற்றுச்சுவர் மட்டும் கட்டப் பட்டது. நீதிமன்ற வழக்கு காரணமாக மருத்துவ மனை கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு திருப்பூரில் 100 படுக்கைகள் கொண்ட ஈஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க ரூ.150 கோடி நிதி ஒதுக்கப்படும் என ஒன்றிய தொழிலா ளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் பண்டாருதத்தாத்ரேயா அறிவித்தார். 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி பிரதமர் மோடி, ஈஎஸ்ஐ மருத்துவமனை கட்ட பெருமா நல்லூரில் அடிக்கல் நாட்டினார். இதனையடுத் தும், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எந்த கட்டு மானப் பணிகளும் துவங்கப்படவில்லை, பின்னர், 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூ.81.34 கோடி மதிப்பில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டும் பணி தொடங்கப்பட்டது. அரசுத்தரப்பில் உதவி பொறி யாளர் ஒருவரும். மத்திய பொதுப்பணித்துறையி டம் ஒப்பந்தம் பெற்ற தில்லியை சேர்ந்த நிறு வனத்தின் பொறியாளர்கள் 10 பேர் உட்பட 400க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கட்டுமானப் பணியை மேற்கொண்டனர்.
மூன்று தளங்களில், 100 படுக்கை வசதியுடன் கூடிய மருத்துவமனை மற்றும் மருத்துவப் பணியா ளர்கள் தங்கும் வகையில் 32 குடியிருப்புகள், தார்ச் சாலை, குடிநீர், உணவகம், கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் உள்ளிட்டவைகள் கட்டப்பட்டது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கட்டுமானப் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கும் வரும் என்று தெரி விக்கப்பட்டு, பின்னர், பிரதமர் நரேந்திர மோடி இஎஸ்ஐ மருத்துவமனையின் கட்டடத்தை திறந்து வைத்தார். தற்போது, திருநெல்வேலி, சென்னை உள் ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனை ஊழியர் களை 50 பேர் இந்த மருத்துவமனையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ கண்காணிப்பா ளர் இதுவரை நியமிக்கப்படவில்லை. இன்னும் மருத்துவமனையில், அறுவை சிகிச்சைக்கான கருவிகள், ஸ்கேன், எக்ஸ்ரே, படுக்கைகள் உள் ளிட்ட எந்த உபகரணங்களும் வாங்கப்படவில்லை. இப்போதைக்கு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிருந்து சில மருத்துவர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். தினசரி 50 வெளி நோயாளிகள் வருவதாகவும், அறுவை சிகிச்சை உள்ளிட்ட தீவீர சிகிச்சைகளுக்கு வருபர்கள் முதலுதவி மட்டும் இங்கு செய்யப்பட்டு, கோவை இஎஸ்ஐ மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக ஈஎஸ்ஐ மருத்துவமனை பயனாளிகள் தெரிவிக்கின்றனர். மதுரை எஸ்ம்சில் ஒற்றை செங்கல் மட்டும் உள்ள நிலையில், திருப்பூர் இஎஸ்ஐயில் பல செங் கல்கள் என்கிற நிலைதான். மோடிக்கு வாய்தான் நீளம், செயலில் ஒன்றுமே இல்லை என்கின்றனர் திருப்பூர் தொழிலாளர்கள். -லிவின்