districts

img

பயணிகள் நிழற்குடையில் விஷப்பூச்சிகள் தஞ்சம்

உடுமலை, ஜன.2- உடுமலைப்பேட்டை ஒன்றியத்திற்குட் பட்ட பல பேருந்து நிறுத்த கட்டடங்களில் விஷப் பூச்சிகள் தங்கும் இடமாக மாறிவருகிறது. சிதலமடைந்த இந்த கட்டடங்களை அகற்றி புதிய கட்டடங்கள் அமைக்க வேண்டும் என் கிற கோரிக்கை எழுந்துள்ளது.  உடுமலைப்பேட்டையை சுற்றியுள்ள கிரா மப்புறங்களில் பேருந்து நிறுத்தப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக பயணி கள் நிற்க கட்டிடங்கள் கட்டப்பட்டது. இந்த கட்டடங்கள் முறையான பராமரிப்புகள் இல் லாததால், பஸ் நிறுத்த கட்டடங்கள் மேற்கூரை கள் கீழே விழும் நிலையில் உள்ளது. மேலும் கட்டிடபகுதி முழுவதும் செடிகள் வளர்ந்து விஷப்பூச்சிகள் தங்கும் இடமாக உள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப் பட்ட அரசு சார்பில் பேருந்து நிறுத்தப்பகுதி கட் டிடங்கள் மிகவும் பலவீனமாக உள்ளதால் விபத்து ஏற்படும் முன்பாக அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும். இல்லை யெனில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக  மடத்துக்குளம் தாலூகா, கொழுமம் பகுதி யில் பராமரிப்பு இல்லாத பழைய சத்திர  கட்டிடத்தில் மழைக்கு ஒதுக்கிய மூன்று பேர் உயிர் இறந்தது போல், அசம்பாவிதம் ஏற்ப டும் வாய்ப்பு உள்ளது. விபத்துகள் ஏற்படும்  முன்பாக பாதுகாப்பு நடவடிக்கையை கருத் தில் கொண்டு அகற்ற வேண்டும், மேலும், இதுபோன்ற பழைய சிதிலமடைந்த கட்டடங் களை முழுமையாக அகற்றிவிட்டு புதிய பேருந்து நிறுத்த கட்டடங்களை கட்ட வேண் டும், என்றனர்.