districts

img

வெண்மணி தியாகிகள் நினைவு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

உடுமலை, டிச.24-  வெண்மணி தியாகிகள் நினைவு தின கோரிக்கை முழக்க  உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் சார்பில் உடுமலை ஒன்றியம், ஜல்லிபட்டியில் சனியன்று  நடைபெற்றது.  தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் தொழிலா ளர்களுக்கு மாதத்தில் ஒரு வாரம் மட்டுமே வேலை வழங்கப்ப டுகிறது. மீதி மூன்று வாரங்கள் வேலை வழங்கப்படுவது இல்லை. இந்த வேலையை நம்பி இருக்கும் நூற்றுக்கணக் கான தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். மாதம்  முழுவதும் தொடர்ந்து வேலை வழங்குவதை ஊராட்சி நிர்வா கமும், ஒன்றிய நிர்வாகமும் உறுதிசெய்ய வேண்டும் என்று  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைமை யில் ஒன்று கூடி முழக்கங்கள் எழுப்பி உறுதிமொழி எடுத்தனர்.  இதையொட்டி டிச. 27 ஆம் தேதியன்று உடுமலை வட்டார  வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுப்பது என்றும் முடிவு செய் யப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், ஒன் றிய செயலாளர் ரங்கராஜ், கிளைத்தலைவர் பெருமாள்சாமி  உட்பட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண் டனர்.