திருப்பூர், டிச.4- பல்லடம் அருகே, விவசாயம் செய்ய உகந்த நிலத்தை தரிசு நிலம் என்று தவறான ஆவணங்களை கொடுத்து கட்டிடம் கட்ட அனுமதி வங்கியுள்ள வேலாத்தாள் இண்ட ஸ்ட்ரீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாயம் அல்லாத பயன்பாட் டிற்கு நிலத்தை மாற்றுவதற்காக அவர்க ளுக்கு கொடுத்துள்ள பரிந்துரையைத் திரும்ப வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்க ளன்று நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில், வாவிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவ சாயிகள் மற்றும் அனைத்து கட்சியின் சார் பில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், வாவிப் பாளையம் கிராமம் மற்றும் சுற்றுவட்டா ரத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் மிகச் சிறந்த வளமான மண் மற்றும் நீர்வளம் கொண்ட வேளாண்மைக்கு மிகவும் உகந்த கிராமங்கள் ஆகும். மேலும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டப் பகுதிகளாகவும் உள்ளது. இங்கு நிலவும் தட்பவெப்ப சூழ் நிலை காரணமாகத் தென்னை மரம் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நிலத்தை விவசாய பூமியாகவே வேலாத் தாள் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வாங்கியுள் ளது. ஆனால், விவசாயம் செய்வதற்கு பதி லாக தரிசு நிலம் என்று தவறான ஆவணங்க ளைச் சமர்ப்பித்து, வேளாண்மைக்கு உகந்த நிலம் அல்ல என்கிற சான்றைப் பெற்று, மிகப் பெரிய அளவில் தொழிற்சாலை அமைப்ப தற்குக் கட்டிட அனுமதி பெற்றுள்ளார்கள். தொழிற்சாலைகள் எங்கு வேண்டுமானா லும் அமைத்து தொழில் செய்ய முடியும். ஆனால் வேளாண்மை உற்பத்தி என்பது நல்ல மண்வளமும், நீர் வளமும் கொண்டு இந்தப் பகுதியில் மட்டுமே செய்ய முடியும். வாவிபாளையம் போன்ற வருவாய் கிராமங் களுக்கு உட்பட்ட கிராமங்களில் விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு, விவசாய நிலத்தை வகைப்பாடு மாற்றம் செய்வது என் பது, மிகப்பெரிய பேரழிவில் கொண்டு செல் லும். மேற்கண்ட காரணங்களை அடிப்படை யாகக் கொண்டு ஊராட்சி மன்றத்தின் சார்பில் தொழிற்சாலை கட்டுவதற்கும், தொடங்குவ தற்கும் அனுமதி மறுத்து கிராம சபைகளி லும் ஊராட்சி மன்றத்திலும் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயம் செய்ய உகந்த நிலத்தை தரிசு நிலம் என்று தவ றான ஆவணங்களைக் கொடுத்து மோசடி செய்த வேலாத்தாள் இண்டஸ்ட்ரீஸ் நிறுவ னத்திற்கு வாவிப்பாளையம் கிராமம், புல எண்கள் -689,690/1அ 2 விவசாய நிலத்தை. விவசாயம் அல்லாத பயன்பாட் டிற்கு மாற்றுவதற்காக கொடுத்துள்ள பரிந் துரையை திரும்ப பெற்று வேளாண்மையை காத்திட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.