தருமபுரி, ஏப்.3- மக்களவைத் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாற்றுத்திறனாளிகளின் இருசக்கர வாகனப் பேரணி செவ்வாயன்று நடைபெற் றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலி ருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் கி.சாந்தி தலைமை வகித்து, தொடங்கி வைத்தார். தேர்தல் பொதுப்பார்வையாளர் (காவல்) விவேக் ஷியாம் முன்னிலை வகித்தார். பேரணியில் தேர்தலில் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரில் மாற் றுத்திறனாளிகள் பேரணியாகச் சென்று வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், மகளிர் திட்ட அலு வலர் பத்ஹூ முகமது நசீர், மாற்றுத்திறனாளிகள் நல அலு வலர் பொ.செண்பகவள்ளி உட்பட அரசுத்துறை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.