districts

img

ஒன்றிய அரசின் புதிய திட்டத்தால் பாதிப்பு வாகன ஓட்டுநர்கள் ஆட்சியரிடம் மனு

தருமபுரி, ஜன.8- ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத்தால், ஓட்டுநர்களின் வாழ் வாதாரம் பாதிக்கும் என்பதால் அச்சட் டத்தை ஒன்றிய அரசு திரும்பபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தரும புரி ஆட்சியரிடம் வாகன ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.  ஒன்றிய அரசு பாரதீய நியாய சன் ஹிதா (BNS) என்ற புதிய சட்ட மசோ தவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய சட்டத்தின் கீழ், எதிர்பாராமல் நடைபெறும் விபத்துக்ளுக்கு கூட 7  ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை,  ரூ 5லட்சம் அபராதம் என சட்டம் இயற் றப்பட்டுள்ளது. இச்சட்டத்தை கண் டித்து ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்க ளில் இயல்பு வாழ்க்கையே ஸ்தம்பிக் கும் வகையில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.  தமிழகத்திலும், இச்சட்டம் குறித்து  வாகன ஓட்டுநர்களுக்கு அச்சத்தை உரு வாக்கியுள்ளது. இதனையடுத்து, ஒன் றிய அரசு இச்சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்கிற போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன்ஒரு பகுதியாக, ஒன்றிய அரசின் இந்த மோச மான சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என தருமபுரி ஆட்சியர் கி.சாந் தியிடம் வாகன ஓட்டுநர்கள் மனு அளித்த னர்.