சேலம், பிப்.4- புதிய மோட்டார் வாகன சட் டத்தை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி சேலத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வாகன பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக மோட்டார் தொழி லாளர்கள் சங்கங்களின் மண்டல குழு கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. சிஐடியு சேலம் மாவட்டக்குழு அலுவலகத்தில் சனியன்று, மோட் டார் தொழிலாளர்களின் மாநிலந்தழு விய பிரச்சார இயக்க மண்டல கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிஐடியு சாலை போக்குவரத்து தொழி லாளர் சங்க மாநில துணைத்தலை வர் எஸ்.கே.தியாகராஜன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், ஒன்றிய அரசு அனைத்து தொழில்களுக்கும் முட்டுக்கட்டை போடும் விதத்தில் தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை இயற்றி வருகிறது. குறிப் பாக பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவ னங்களுக்கு ஆதரவாக எண்ணற்ற நிலைபாடுகளை எடுத்து வருகிறது. இதனால் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர தொழிலாளர்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். குறிப் பாக சிறு, குறு, நடுத்தர தொழில்கள் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக புதிய மோட் டார் வாகன சட்டத்தை அமல்படுத்தி மோட்டார் தொழிலுக்கு பாதகமான சூழலை ஒன்றிய அரசு ஏற்படுத்தியுள் ளது. எனவே, ஒன்றிய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும் பப்பெற வேண்டும்.
ஆன்லைன் அப ராதம் என்ற பெயரில் ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களை தண்டிக்கக்கூடாது. 15 ஆண்டு வாக னங்கள் கண்டம் செய்யப்படுவதை திரும்பப்பெற வேண்டும். மேலும், தொழிலாளர் நல சட் டங்களை நான்கு தொகுப்புகளாக பிரித்ததை கண்டித்தும் பிப்.15 ஆம் தேதி முதல் பிப்.25 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பிரம்மாண்ட வாகன பிரச்சாரத்தில் ஈடுபட போவ தாக தொழிற்சங்க தலைவர்கள் அறி வித்துள்ளனர். இதனிடையே சேலம் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் அனைத்து ஆட்டோ, டெம்போ மற்றும் மோட்டார் வாகன ஸ்டாண்டுகளில் பிரச்சாரம் நடை பெற உள்ளது. அதனைத்தொடர்ந்து மார்ச் மாதத்தில் வேலை நிறுத்த போராட்டம் நடத்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், சாலை போக்கு வரத்து சங்க பொதுச்செய லாளர் பி.முருகேசன், ஆட்டோ சங்க செயலாளர் உதயகுமார், நாமக்கல் சாலை போக்குவரத்து சங்க செயலா ளர் சுரேஷ், தலைவர் பழனி வேலு, ஆட்டோ சங்க செயலாளர் பொன்னு சாமி, சாலை போக்குவரத்து சங்க தருமபுரி பொதுச்செயலாளர் ஆனஸ்ட் ராஜ், பெருமாள், கிருஷ்ணகிரி ஆட்டோ சங்க செயலாளர் முருகன், சாலை போக்குவரத்து சங்க செய லாளர் முத்து, ஆட்டோ சங்க தரும புரி செயலாளர் சிவகுரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.