தருமபுரி, ஜன.19- ஜனவரி 19 தியாகிகள் தினத்தை முன்னிட்டு சிஐடியு, விவசாயிகள் சங் கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார் பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட் டது. சுதந்திர இந்தியாவில் நாடு தழுவிய வேலை நிறுத்தம் 1982 ஆம் ஆண்டு, ஜன.19 ஆம் தேதியன்று நடைபெற்றது. அப்போது, போராட்டத்தை ஒடுக்கு வதற்காக ஈடுபட்ட காவல் துறையின ரின் துப்பாக்கி குண்டுகளை தோழர்கள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் ஆகியோர் நெஞ்சில் ஏந்தி, வீரமரணம் அடைந்தனர். அத்தகைய தோழர்களின் நினைவை போற்றும் வகையில் தரும புரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நினை வேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்டச் செயலா ளர் பி.ஜீவா தலைமை வகித்தார். சிஐ டியு மாநிலச் செயலாளர் சி.நாகரா சன், விவசாய தொழிலாளர் சங்க மாவட் டச் செயலாளர் எம்.முத்து, விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி கே.குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம்
தியாகிகள் அஞ்சான், நங்கூரான், ஞானசேகரன் ஆகியோரது நினைவு தினம் சிஐடியு சார்பில், சேலம் மாவட் டம், மேட்டூர் சின்ன பார்க் அருகில் சிஐ டியு கட்டுமான சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டப் பொருளாளர் வீ.இளங்கோ தலைமை வகித்தார். மூத்த தலைவர் பி.மல்லிகார் ஜுணன், செங்கொடியை ஏற்றி வைத் தார். இதில் கட்டுமான சங்கச் செயலா ளர் செ.கருப்பண்ணன், நிர்வாகிகள் எஸ்.சூசை பிரகாசம், ஜி.பி.நந்தகுமார், து.சிங்கராயன், தி.ராஜு, கே.சுந்தரரா ஜன், பி.கோபால், பிரான்சிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை
கோவை மாவட்டம், சூலூர் பேருந்து நிலையம் அருகே தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் 42ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜெ. ரவீந்திரன் தலைமை வகித்தார். இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.மனோ கரன், செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி மற்றும் நிர்வாகிகள் வே.விஜயராக வன், ஏ.ராஜா உள்ளிட்டோர் உரையாற் றினர். இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.