districts

சேலம் மாவட்டத்திலேயே வாழப்பாடி இருக்க வேண்டும்

சேலம், ஜன.25- சேலம் மாவட்டத்திலிருந்து ஆத்தூர் பகு தியை பிரித்து, தனி மாவட்டமாக அறிவிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், வாழப்பாடி வருவாய் வட்டத்தை, ஆத்தூர் மாவட்டத்துடன் சேர்க் காமல், சேலம் மாவட்டத்திலேயே வைத்தி ருக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, ஆத்துரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் பரவி வருகிறது. இந்த புதிய ஆத்தூர் மாவட்டத்தில் ஆத்தூர், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, ஏற்காடு ஆகிய 5 வருவாய் வட் டங்கள் மற்றும் நாமக்கல் மாவட்டம், நாம கிரிப்பேட்டை ஒன்றியத்தில் இருந்து திம்ம நாயக்கன்பட்டி உள்ளிட்ட சில கிராமங்களை இணைக்கவும், அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, ஏற்காடு வரு வாய் வட்டத்தை ஆத்தூர் மாவட்டத்தில் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி யைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு புதனன்று போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், வாழப் பாடி வருவாய் வட்டத்தையும் ஆத்தூர் மாவட்டத்தில் இணைப்பதற்கு இப்பகுதி மக் களிடையே எதிா்ப்பு கிளம்பியுள்ளது. வாழப் பாடி ஒன்றியத்திலுள்ள 20 கிராம ஊராட்சி கள் மற்றும் வாழப்பாடி, பேளூர் ஆகிய 2 பேரூ ராட்சிகளும், அயோத்தியாப்பட்டணம் ஒன்றி யத்திலுள்ள பேரூராட்சி மற்றும் அனைத்து கிராமங்களும், சேலத்திற்கு அருகில் அமைந் துள்ளதால் வாழப்பாடி வருவாய் வட்டத்தை  ஆத்தூர் மாவட்டத்துடன் இணைக்காமல், சேலம் மாவட்டத்திலேயே இணைத்திருக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து வாழப்பாடி வருவாய்க்குட் பட்ட பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்  கூறுகையில், அயோத்தியாப்பட்டணம் சேலத் திலிருந்து 3 கி.மீ., துாரத்திலேயே உள்ளது. இப்பகுதி கிராமங்களை சேலம் மாவட்டத் தில் இருந்து பிரித்து, 50 கி.மீ., துாரத்திலுள்ள  புதிதாக உதயமாகும் ஆத்தூர் மாவட்டத் தில் இணைக்கப் போவதாக தகவல் வெளி யாகி வருகிறது. இந்த தகவல் அதிகாரப் பூர்வமானதா எனத் தெரியவில்லை. எப்படி இருப்பினும், நிர்வாகத்திற்காக சேலம் மாவட் டத்தை பிரிக்கும் சூழல் ஏற்பட்டால் அயோத்தி யாப்பட்டணம் பகுதி மக்களின் நலன் கருதி, அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்திலுள்ள கிராமங்களை சேலம் மாவட்டத்திலேயே இணைத்திருக்க மாவட்ட நிர்வாகமும், மக் கள் பிரதிநிதிகளும் தமிழக அரசும் நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாழப்பாடி வருவாய் வட்டத்தி லுள்ள பெரும்பாலான கிராமங்கள், சேலத் திற்கு அருகிலேயே அமைந்துள்ளன. இந்த  கிராமங்களை ஆத்தூர் மாவட்டத்தில் இணைத் தால், பொதுமக்கள் அலைகழிப்புக்குள்ளாக  வேண்டிய நிலை ஏற்படும். எனவே, சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரித்தாலும், வாழப் பாடி பகுதி கிராமங்களை ஆத்தூர் மாவட்டத் தோடு இணைக்காமல், சேலம் மாவட்டத்தி லேயே இணைத்திருக்க வழிவகை செய்ய வேண்டும், என்றனர்.