சேலம், ஜன.11- ஓமலூர் அருகே 4 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட் டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு சட்டமன்ற உறுப்பி னர் மணி அடிக்கல் நாட்டினார். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள பெரியேரிப் பட்டி ஊராட்சியில் 4 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கும் விழா ஓமலூர் ஒன்றிய பெருந்தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடை பெற்றது. இதில் ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி கலந்து கொண்டு, திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் படி, அமரகுந்தி பிரிவு சாலையிருந்து பெரியேரிப்பட்டி வரை செல்லும் குறுகிய சாலையை 4 கோடியே 20 லட்சம் மதிப்பீட் டில் அகலப்படுத்தி சாலையை மேம்படுத்தும் பணி மற்றும் பெரி யேரிப்பட்டி ஊராட்சி, வகுத்தனூர் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இதில், பலர் கலந்து கொண்டனர்.