districts

img

வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்

கோவை, மார்ச் 30- கோவை - சென்னை இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வியாழனன்று நடைபெற்றது. இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில்  தமிழகத்தில்  சென்னை, பெங்களூரு இடையே இயக்கப்பட்டு  வருகிறது. இந்நிலையில் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் சென்னை - கோவை இடையே வந்தே வந்தே பாரத் ரயில் சேவை துவங்கு கிறது. இதற்கான சோதனை ஓட்டமானது வியாழனன்று நடை பெற்றது. அதன்படி காலை 5.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரயில் 11.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி துவக்கி வைக்கிறார். இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய 3  ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

;