districts

img

திருமுருகன்பூண்டி கலை இரவு: வைக்கம் போராட்டம் ஆவணப்படம் திரையிடல்

அவிநாசி, ஜன.27- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் திரு முருகன்பூண்டியில் கலை இரவு  நடைபெற்றது. இதில், கிராமிய பாடல்கள், வைக்கம் போராட்டம் குறித்து ஆவணப்படம் திரையிடப் பட்டது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கம் திருமுருகன்  பூண்டி கிளை சார்பில் குடியரசு தினத் தன்று கலை இரவு ஏற்பாடு செய்யப் பட்டது. இக்கலை இரவில் வேலா இளங்கோ கலைக்குழுவினரின் தப் பாட்டம், மயிலாட்டம், மானாட்டம், நாதஸ்வரம், பரதநாட்டியம், கிராமிய  பாடல்கள் நடைபெற்றது. இதில், மாணவியர்களின் நடனம், சிறு வர் சிறுமிகள்  சிலம்பாட்டம், போன்ற வையும் அரங்கேற்றம் செய்யப்பட் டது.  இதனைத் தொடர்ந்து வீழ்வேன் என நினைத்தாயோ என்ற தலைப்பில்  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்  துணைத் தலைவர் நா.முத்து நிலவ னின் உரை, இதனையடுத்து தந்தை  பெரியார் வைக்கம் போராட்டம் குறித்து 15 நிமிடம் ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதேபோல அமுது என்ற குறும்படமும் திரையி டப்பட்டது.  இந்நிகழ்வை திருமுருகன் பூண்டி கிளை நிர்வாகி ஜீவபாரதி தலைமையேற்று நடத்தினார். இதில்,  கிளை நிர்வாகி ராஜகுரு வரவேற் புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து அமைப்பின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் கலை இரவை துவக்கி வைத்தார். மேலும், திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கு ரத்ததானம் வழங்கிய நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். முடிவில் கிளை நிர்வாகி சந்தோஷ்குமார் நன்றி கூறி  கலை இரவு நிகழ்வை முடித்து வைத் தார்.