தரும்புரி, மார்ச் 12- உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வாச்சாத்தி சம்ப வத்தில் பாதிக்கப்பட்ட பெண்களில் 4 பேருக்கு சொந்த வீடு இல்லை. எனவே, அரசு வீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லி பாபு கேட்டுக்கொண்டுள்ளார். தருமபுரி மாவட்டம் - பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வாச் சாத்தி கிராமத்தில் கடந்த 1992-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கா லத்தில் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்துறை யைச் சேர்ந்த நபர்களால், கிராமம் சூறையாடப்பட்டது. மேலும், 18 இளம் பெண்கள் கூட்டு பாலியல் வன்புணர்ச் சிக்கு ஆளாக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் அன்றைய அதிமுக ஆட்சி செயல்பட்டது. இதைத்தொடர்ந்து, வாச்சாத்தி கிராமத்தில் நடைபெற்ற அநீதிக்கும், வன்கொடுமைகளுக்கும் நீதிகேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் நீண்ட நெடிய பெரும் போராட்டத்தினை முன்னெ டுத்தது. இதனைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றம் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 18 பெண்க ளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கவேண்டும். இந்த குடும்பத் தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும். பொருளா தார ரீதியாக முன்னேற தொழில் மற்றும் இரண்டும் ஏக்கர் நிலம் வழங்கவேண்டும். கிராமத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்ற தேவையான அடிப்படை வசதிகள் செய்த தர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தர விட்டு, தீர்ப்பளித்தது. இந்த நிலையில், தீர்ப்பில் குறிப்பிட்டதுபோல் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம், சனிக்கிழமையன்று வழங்கப்பட்டது. இதனை யடுத்து தருமபுரிக்கு அரசு நலத்திட்டங்கள் வழங்கும் விழா விற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை சந்தித்து வாச்சாத்தி பெண்கள் நன்றி தெரிவித்தனர். பின்னர், வாச்சாத்தி சம்பவத்துக்கு எதிராக 31 ஆண்டு காலம் போராட்டம் நடத்தி நீதி பெற்றுத் தந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலை வர்களை தருமபுரியில் சந்தித்து நன்றியை தெரிவித்தனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநி லத் தலைவர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் கே.என். மல்லையன், மாவட்டத் தலைவர் அம்புரோஸ், மாநில துணைத்தலைவர் ஏ.கண்ணகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தி.வ.தனுசன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் சில முக்கிய அம்சங்களான பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். வாச்சாத்தி கிராமத்திற்கு இதர கட்ட மைப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். வேலை செய்து தன்னுடைய வாழ்நாளை ஜீவனம் செய்ய, குறிப்பாக பெண்க ளுக்கு கார்மெண்ட்ஸ் போன்ற சிறு தொழில் அமைத்து தர வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களில் 4 பேருக்கு வீடு இல்லை அரசு வீடு வழங்கவேண்டும். அரசு நிலம் வழங்க வேண்டும் என தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு கேட்டுக்கொண்டுள்ளார்.