உதகை, நவ.25- கனமழை காரணமாக சுற்றுலாப் பய ணிகளின் வருகை குறைந்ததால், உத கையிலுள்ள சுற்றுலாத் தலங்கள் வெறிச் சோடி காணப்படுகின்றன. நீலகிரிக்கு தினந்தோறும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங் கள், வெளிநாடுகளில் இருந்தும் அதிக ளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல் கின்றனர். குறிப்பாக, கோடை காலத் தில் அதிகளவிலான சுற்றுலாப் பயணி கள் வருவார்கள். இங்கு வரும் சுற்று லாப் பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் மற்றும் தொட்டபெட்டா போன்ற சுற்றுலா தலங் களை கண்டு ரசித்து மகிழ்வார்கள். தற் போது நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. மழையால் மாவட்டத்திற்கு செல்லக்கூடிய குன் னூர் - மேட்டுப்பாளையம் சாலை, கோத் தகிரி - மேட்டுப்பாளையம் சாலைகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டன. மேலும், சில இடங்களில் பாறைகள் விழும் நிலையிலும், மண் சரிவு ஏற்ப டும் அபாயமும் உள்ளது. இதனால், மழை ஓயும் வரை நீல கிரி மாவட்டத்திற்கு இவ்விரு வழித்தடங் களிலும் சுற்றுலாப் பயணிகள் வரு வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சி யர் அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, இரவு நேரங்களில் வருவதை தவிர்க் குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இத னால், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற் றுலாப் பயணிகள் எண்ணிக்கை குறைந் துள்ளது. அதன்படி, வெள்ளியன்று உத கையிலுள்ள தாவரவியல் பூங்காவில் வழக்கத்தை காட்டிலும் சுற்றுலாப் பய ணிகள் கூட்டம் குறைவாகவே இருந் தது. அதேபோல கோத்தகிரி, குன்னூர் பூங்காக்களுக்கும் சுற்றுலாப் பயணிக ளின் வருகை வெகுவாக குறைந்துள் ளது. இதனால் குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்கா, லேம்ஸ்ராக், டால்பினோஸ், நேரு பூங்கா, கொடநாடு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
மீட்புப்படையினருக்கு ஆட்சியர் பாராட்டு
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக பெய்து வரும் மழையால் குன்னூர் லாலி மருத்துவமனை கருணை மையத்தில் ராட்த மரம் விழுந்தது. இதனை மீட்க சென்ற தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையை தேனீக்கள் கொட்டியது. உடனடியாக, சுதாரித்துக் கொண்ட மீட்பு படையி னர் தீ மூட்டி தேனிக்களின் கூட்டை அகற்றிய பின்னர், நவீன உபகர ணங்களின் உதவியுடன் மரத்தை அகற்றினர். இச்சம்பவம் அறிந்த மாவட்ட ஆட்சியர் அருணா, நேரில் பார்வையிட்டு மீட்பு பணியினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து 15 பேர் கொண்ட மீட்பு படையினர் செங்கல் கோம்பை பகுதியில் நிலச்சரிவு பகுதியில் சிக்கி வெளியே வர முடியாமல் இருந்து பாதிக்கப்பட்ட 6 பழங்குடியினரை பத்திரமாக மீட்டு அழைத்து வந்ததற்கு பாராட்டு தெரிவித்தார்.