உதகை, ஜூலை 8- உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலையோரமிருந்த கடை களை நகராட்சி நிர்வாகத்தினர் அதிரடியாக வெள்ளியன்று அகற்றி னர். இதனால் தங்களது வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரி வித்துள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை சேரிங் கிராஸ் பகுதியிலிருந்து அரசு தாவர வியல் பூங்கா செல்லும் சாலையில் நடைபாதை கடைகள் உள்ளன. இங்கு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு வியாபாரிகள் நடைபாதையில் கடை வைத்து நடத்தி வந்தனர். இந்நிலையில் ஆக் கிரமிப்பு கடைகள் மற்றும் கட்டிடங் கள் குறித்து நகராட்சி நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தி அவற்றை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றது. இதேபோன்று அரசு தாவரவியல் பூங்கா சாலையில் இருந்த கடைகளை அகற்ற நக ராட்சி நிர்வாகம் முடிவு செய்து கடை கள் அகற்றப்பட்டன. ஆனால், வியாபாரிகள் வேறு வழியில்லாத தால் மீண்டும் அதே இடத்தில் வியா பாரிகள் கடைகள் அமைத்து வியா பாரத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அரசு தாவரவி யல் பூங்கா சாலை வழியாக துணை குடியரசு தலைவர், தமிழக ஆளு நர், முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அடிக்கடி வருவதால் அந்த சாலையில் உள்ள கடைகளை நிரந்தரமாக அகற்ற நகராட்சி நிர்வா கம் முடிவு செய்தது. இதன்படி கடந்த ஏப்ரல் மாதத்தில் கடைகளை அகற்றும்படி நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோர வியாபாரிக ளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக வியாபாரம் இல்லாத தால் இந்த முறை கோடை சீசனுக்கு மட்டும் அனுமதிக்கும்படி வியா பாரிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு 2 மாத கால அவகாசம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இதுவரை வியாபாரிகள் கடைகளை அகற்றா தால் வெள்ளியன்று துணை காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் நகராட்சி நிர்வாகத்தி னர் பொக்லைன் எந்திரம் மூலமாக அங்கு ஆக்கிரமித்து இருந்த கடை களை அகற்ற வந்தனர்.
இதனையடுத்து ஒரு சில வியா பாரிகள் தங்களது கடைகளை தாங் களாகவே காலி செய்தனர். மேலும், காலி செய்யாத கடைகள் நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றப்பட்டது. அப்போது நகராட்சி நிர்வாகத்தி னரை சாலையோர வியாபாரி கள் முற்றுகையிட்டு வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாதிக் கப்பட்ட வியாபாரிகள் தரப்பினர் கூறுகையில், எங்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோர வியாபாரிகள் என அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தக் கடைக ளுக்கு தலா ரூ.20ஆயிரம் வங்கி கடன் தரப்பட்டது. இந்நிலையில் திடீரென்று கடைகளை அகற்றுவ தால் நாங்கள் எவ்வாறு வங்கி கடனை கட்டுவது என்று தெரிய வில்லை. மேலும், எங்களின் வாழ் வாதாரமே இந்த கடைகளை நம்பித் தான் உள்ளது. மாற்று இடம் தரும் வரையில் இந்த கடைகளை அப்புறப் படுத்தக்கூடாது என கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து நகராட்சி ஆணை யாளர் காந்திராஜன் கூறுகையில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடை பாதை மற்றும் சாலையோர வியா பாரிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி உள்ளோம். தற்போது தாவர வியல் பூங்கா பகுதியில் 63 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. அகற்றப்பட் டுள்ள இடத்தில் கடைகள் கட்டி அவர்களுக்கு வாடகைக்கு விடப் படும். இதன் மூலம் அவர்களுக்கு வியாபாரம் மூலம் வாழ்வாதார மும், நகராட்சிக்கு வருமானமும் கிடைக்கும், என்றார். முன்னதாக, கடைகள் அகற்றப் பட்ட இடத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகி யோர் நேரில் ஆய்வு மேற்கொண்ட னர்.