நாமக்கல், ஜூலை 29- கந்துவட்டி கொடுமையால் ஏற்ப டும் உயிரிழப்புகளை தடுத்து நிறுத் திட வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நால் ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபா ளையம், குமாரபாளையம் சாலை, அக்ரஹாரம் பகுதிலுள்ள பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் கடந்த வாரம் சந்தேகத்திற்குரிய வகையில் விசைத்தறி கூலி தொழிலாளி செந் தில் மரணமடைந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுபோன்று தொடர்ந்து கந்து வட்டி கும்பலின் அடாவடி வசூல் நட வடிக்கையால் தொடர்ந்து உயிரி ழப்புகள் ஏற்படுகிறது. சந்தேக முறையில் மரணமடைந் தவர்கள் குறித்து காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப் பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முழுவதும் கந்து வட்டி பிரச்சனையினால் ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படுவதால், தமிழக அரசு கந்துவட்டியை ஒழித்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகை யில் நடந்து கொள்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியறுத்தி பள்ளிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். பள்ளிபாளையம் ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமார் ஆர்ப் பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பெருமாள், எம். அசோகன், ஒன்றிய குழு உறுப்பி னர்கள் கே.குமார், எஸ்.முத்துகுமார், கிளை செயலாளர்கள் சந்திரசேகர், அண்ணாதுரை, வாலிபர் சங்க ஒன் றிய தலைவர் எம்.லட்சுமணன், உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.