திருப்பூர், ஜன.16- ஜனவரி 20ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் நடத்தப் படும் பேச்சுவார்த்தையில் அரசு அறிவித்த விசைத்தறி நெசவுக் கூலி உயர்வை ஜவுளி வியாபாரிகள் வழங் குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் வலியு றுத்தி உள்ளனர். சோமனூர், பல்லடம் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர் கள் சங்க நிர்வாகிகள் கூட்டம் மங்க லம் அருகே அம்மன் கலையரங் கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. ோமனூர் சங்கத் தலைவர் பழனிச் சாமி தலைமையில் பல்லடம் சங்கத் தலைவர் வேலுசாமி முன்னிலை யில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இரு சங்கங்களை சேர்ந்த நிர்வாகி கள் பங்கேற்றனர். இதில் ஜனவரி 9ஆம் தேதி முதல் விசைத்தறியாளர்கள் காலவரை யற்ற வேலைநிறுத்த போராட் டத்தை நடத்தி வருகின்றனர். வரும் 20 ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியரகத்தில் நடத்தப்படும் இரு தரப்பு கூட்டத்தில் சோமனூர், பல்ல டம், திருப்பூர், அவிநாசி ஆகிய நான்கு பகுதிகளை சேர்ந்த ஜவுளி வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பங்கேற்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். அத்து டன் சோமனூர் ரகத்துக்கு 23 சத விகிதம், பல்லடம் ரகத்துக்கு 20 சத விகிதம் என ஜவுளி வியாபாரிகள் கூலி உயர்வு வழங்குவதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண் டும். மேலும்,இக்கூட்டத்துக்கு ஜவுளி வியாபாரிகள் வரா விட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவித்த ஒப் பந்தப்படி இந்தக் கூலி உயர்வு வழங்குவதை நடைமுறைப்படுத் தும் வரை தற்போது நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநி றுத்த போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 20 ஆம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் சுமூக தீர்வு ஏற்படாவிட்டால் இரு சங்கங்களின் நிர்வாகிகள் கூடிப் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.