districts

img

தருமபுரி ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தருமபுரி, ஜன.1- தருமபுரி ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க  வேண்டும் என பயணிகள் வலியுறுத் தியுள்ளனர். ஆங்கிலேயேர் ஆட்சிக்காலத் தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட் டத்தின்போது, தருமபுரியில் ரயில்வே தடம் அமைத்து போக்கு வரத்து வசதி ஏற்படுத்தப்பட்டது. தரு மபுரி ரயில்வே தடம் வழியாக  தில்லி, மும்பை, மாரட்டியம், கர்நாட கம் போன்ற வடமாநிலங்களில் இருந்து தென் தமிழகமான கன்னியா குமரி வரையும், மேற்கு பகுதியான கோவை, கேரளம் வரையும் ரயில் போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த  தருமபுரி ரயில் நிலையம் வடமாநி லங்களில் இருந்து தென் மாநில மான தமிழகத்தை இணைக்கும் ஒரு  இணைப்பு பாலமாக அமைந்துள் ளது. காலப்போக்கில் சேலம் மாவட் டத்திலிருந்து தருமபுரி தனி மாவட் டமாக பிரித்து அறிவிக்கப்பட்டது. இதனால் ரயில்வே நிறுத்தமாக இருந்த தருமபுரியில் தனி மாவட்ட மாக பிரிக்கப்பட்ட போது, ரயில்வே தடம் விரிவாக்கம் செய்யப்பட்டு ரயில் நிலையம் புதுபொலிவுடன் புதுப்பிக்கப்பட்டது. இந்த ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன தருமபுரி ரயில் நிலையம் வழி யாக தற்போது நாள்தோறும் 12 விரைவு ரயில்களும், 6 பயணிகள் ரயில்களும், வாரந்தோறும் 8 சிறப்பு ரயில்கள் உட்பட 26க்கும்  மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின் றன. 2 ஆவது நடைமேடையில் தான்  அனைத்து ரயில்களும் நின்று செல் கின்றன. 3 ஆவது நடைமேடையில் சரக்கு ரயில்கள் பொருட்களை இறக்குமதி செய்கின்றன. பயணி கள் ரயிலில் ஏறுவதற்காக 2 ஆவது  நடைமேடைக்கு செல்ல ரயில்வே பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.  ஆனால், பாலத்தை கடக்க முதி யோர்கள், கர்ப்பிணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். எனவே, முதலாவது நடைமேடையில் ரயில்  நின்று செல்ல நடவடிக்கை எடுக்  கவேண்டும் என ரயில்வே பயணி கள் வலியுறுத்தியுள்ளனர்.