districts

நாமக்கல்லில் தாலுகா மருத்துவமனை அமைக்க வலியுறுத்தல்

நாமக்கல், ஜன.6- நாமக்கல்லில் பழைய அரசு மருத் துவமனை வளாகத்தில் தாலுகா மருத்துவமனை அமைக்க வேண்டும்  என சட்டமன்ற உறுப்பினர் பெ.ராம லிங்கம் வலியுறுத்தியுள்ளார். நாமக்கல் அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனை புதிய கட்டடமா னது கடந்த நவ.21 ஆம் தேதியன்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள மருத்துவமனை கட்டடம் காலி செய்யப்பட்டதால் வெறிச்சோடி காணப்படுகிறது. நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு தினசரி 2 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் வந்து செல்கின்றனர். தற்போது  மருத்துவமனை இடம் மாற்றப்பட் டுள்ளதால் 10 கி.மீ. தொலைவில் உள்ள புதிய கட்டடத்துக்கு செல்ல  வேண்டியுள்ளது. அவசர நிலையில்  வருவோர் மிகுந்த சிரமத்திற்குள்ளா கின்றனா். எனவே, பழைய அரசு மருத் துவமனை வளாகத்தில் 24 மணி நேர மும் செயல்படும் வகையில், புறநோ யாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அங்கு தாலுகா மருத்து வமனை தொடங்கப்பட வேண்டும்.  அங்கிருந்து தீவிர சிகிச்சை தேவைப் படுவோர் புதிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கலாம். பழைய மருத் துவமனை வளாகத்தில் நிர்வாக அலு வலகங்கள், சித்த மருத்துவமனை தவிர பெரிய அளவில் 3 கட்டடங்கள்  காலியாக உள்ளன. எனவே, பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு மருத் துவம், ஊரக நலப் பணிகள் இயக்கு நர் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாமக் கல் சட்டமன்ற உறுப்பினா் பெ.ராம லிங்கம் கடிதம் வழங்கியுள்ளார். மக் கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிக ளும் இதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், அரசின் கவ னத்துக்கு தகவலைக் கொண்டு சென் றதாகவும் அவருக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளனர். நாமக்கல் அரசு  மருத்துவமனை பழைய கட்டடத் தில் உள்ள பச்சிளம் குழந்தைகள் வார்டு கட்டடத்தில் விரைவில் சிறிய  அளவிலான தாலுகா மருத்துவ மனை செயல்பட வாய்ப்புள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் நம் பிக்கை தெரிவித்துள்ளனர்.