districts

img

எலச்சிபாளையத்தில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வலியுறுத்தல்

நாமக்கல், பிப்.8- எலச்சிபாளையம் ஒன்றியத்திற்குட் பட்ட பகுதியில் அரசு கலைக்கல்லூரி துவக்க வேண்டும் என இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தின் மல்லசமுத்தி ரம் ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தி உள்ளது.  நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளை யத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மல்லசமுத்திரம் ஒன்றிய  மாநாடு ஞாயிறன்று நடைபெற்றது. ஒன் றியத் தலைவர் எஸ்.ராஜீ. தலைமையில் நடைபெற்ற மாநாட்டில், துணைத் தலை வர் பிரியா வரவேற்றார். முன்னாள் மாவட்டச் செயலாளர் சு.சுரேஷ் துவக்க வுரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி, முன்னாள் வாலிபர் சங்க பொருளாளர் ரமேஷ், பெரியமணலி தலைவர் தேவ ராஜன், மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பழனியம்மாள், ஒன்றியத் தலைவர் கவிதா ஆகியோர் பேசினர். இதில், எலச்சிபாளையம், மல்லசமுத்தி ரம் ஒன்றியத்தில் அரசு கலைக்கல்லூரி துவக்க வேண்டும். பள்ளி நேரத்தில் செக்கரப்பட்டி பேருந்து நிலையத்தில்  அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல  உத்தரவிட வேண்டும். பெரியமணலி, வையப்பமலை, எலச்சிபாளையம் உள்ளிட்ட அரசு மருத்துவமனை 24  மணி நேரமும் செயல்படுவதை உறுதிப் படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, வாலிபர் சங்க  மல்லசமுத்திரம் ஒன்றியத் தலைவராக பி. விஜய், செயலாளராக து.பூபதிமுரு கன், பொருளாளராக எம்.மோகனப் பிரியா உள்ளிட்டோர் தேர்வு செய்யப் பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து,  வாலிபர் சங்க நாமக்கல் மாவட்டச் செய லாளர் மணிகண்டன் உரையாற்றினார். முடிவில், மணிகண்டன் நன்றி கூறி னார்.