திருப்பூர், மார்ச் 8 - தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக குடும்ப ஓய்வூதியர்களுக்கு, மாநில அரசு மருத்துவ காப்பீட்டு திட் டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். சர்வதேச மகளிர் தினத்தை முன் னிட்டு, திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவில் உள்ள தங்கவேல் திருமண மண்டபத்தில், கோவை அரசு போக்கு வரத்துக் கழக குடும்ப ஓய்வூதியர்கள் கோரிக்கை மாநாடு புதனன்று நடை பெற்றது. குடும்ப ஓய்வூதியர்கள் சங்க மண் டல தலைவர் எம்.பத்மினி தலைமை யில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மண் டல துணை பொதுச்செயலாளர் கே. லோகநாயகி வரவேற்றார். அரசு போக் குவரத்து கழக ஓய்வூதிய நலச் சங்கத் தின் மண்டல தலைவர் ஜி.பழனிச்சாமி, மாநிலத் துணைத் தலைவர் ஆர்.சேது ராமன், திண்டுக்கல் பொதுச் செயலா ளர் எஸ்.கஸ்பர் ராஜ், கோவை பொதுச் செயலாளர் பி.செல்வராசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் எஸ்.பவித்ராதேவி, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங் கத்தின் இணைச் செயலாளர் எம். கிரிஜா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் முன்னாள் மாநில செயலாளர் ஏ. நிசார்அகமது ஆகியோர் கருத்துரை வழங்கினர். இந்த மாநாட்டில், போக்குவரத்து கழகத்தின் பணியாற்றியும், ஓய்வு பெற்ற பிறகும் இறந்தவர்களின் வாரி சுகளான குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல் படுத்தாதது அநீதியாகும். எனவே அவர் களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மாநில அரசு அமல்படுத்துவதுடன், மருத்துவப்படி வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதி யம் வழங்கும் பிபிஓ ஆணையை கால தாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும், போக்குவரத்து கழகத்தின் நேரம் காலம் பாராமல் பாடு பட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுக ளுக்கு தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும், வாரிசு வேலைக்கு மாற்று உறுப்பினரை ஏற்க மறுக்கக்கூடாது, மற்ற அரசுத் துறைக ளின் ஓய்வூதியர்களை விட ரூ.8000 முதல் போக்குவரத்து குடும்ப ஓய்வூதி யர்களுக்கு குறைத்து வழங்கி வரும் நிலையில், குடும்ப ஓய்வூதிய உச்சவ ரம்பை கைவிட வேண்டும், ஓய்வூதிய நிலுவைகளை உடனே வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, கோவை மாவட் டம் மற்றும் திருப்பூர் மாவட்ட அரசு போக்குவரத்துக் கழக குடும்ப ஓய்வூ தியர்கள் 500க்கும் மேற்பட்டோர் பங் கேற்றனர். குடும்ப ஓய்வூதியர் சங்க மண்டல பொருளாளர் எம்.பேபி நன்றி கூறினார்.