districts

img

சமையல் கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

ஈரோடு, ஜூலை 27- சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கட்டுப் படுத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மாதர் சங்க அந்தியூர் தாலுகா பேரவை கூட்டம் கே.ரமணி நினைவகத்தில் எஸ்.கீதா தலைமையில் நடைபெற்றது.  மாவட்ட தலைவர் பி.லலிதா பேரவையை துவக்கி வைத்து  உரையாற்றினார். இதைத்தொடர்ந்து சங்கத்தின் அந்தியூர் தாலுகா தலைவராக எம்.பழனியம்மாள், செயலாளராக எஸ்.கீதா, பொருளாளராக ஏ.சங்கீதா உட்பட 9 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு செய்யப்பட்டது. பேரவையை நிறைவு செய்து மாவட்ட உதவித்தலைவர் ஆர்.கோமதி உரையாற்றி னார். இறுதியாக எம்.பழனியம்மாள் நன்றி கூறினார்.

பவானி

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பவானி தாலுகா 7  ஆவது மாநாடு ஆப்பக்கூடலில்  கே.விஜயலட்சுமி தலைமை யில் நடைபெற்றது. இம்மாநாட்டில், மாவட்ட தலைவர் பி. லலிதா, மாவட்ட செயலாளர் பி.எஸ்.பிரசன்னா, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் பி.பழ னிச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் எஸ். மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட் டில், பவானி தாலுகா தலைவராக ஏ.எம்.கே.விஜயலட்சுமி, செயலாளராக பி.தளிர்க்கொடி, பொருளாளராக எஸ்.மோகனா உள்ளிட்ட 9 பேர் கொண்ட தாலுகா குழு தேர்வு  செய்யப்பட்டது. 

தீர்மானங்கள்

இம்மாநாடுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். வங்கிகளில் குறைந்த வட்டியில் அரசே பெண்களுக்கு கடன் உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமையல் எரி வாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளை குறைக்க வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.