திருப்பூர், செப். 27 – பெண்ணடிமைத்தனத்துக்கு எதி ராக பண்பாட்டுப் போராட்டத்தை விடாப்பிடியாகத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தொடர் வகுப்பில் வலியுறுத்தப்பட்டது. திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்தி வரும் 10 நாள் தொடர் வகுப்பின் ஆறாம் நாள் அமர்வு செவ்வா யன்று நடைபெற்றது. இதில் வர்க்கச் சுரண்டலை தீவிரப்படுத்தும் சமூக ஒடுக் குமுறை என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் பி. சுகந்தி பேசினார். அப்போது அவர் கூறு கையில், மனித குலத்தின் தொன்மை யான காலத்தில் ஏற்றத்தாழ்வு, சுரண் டல், பாகுபாடு இல்லாத பொதுவான சமுதாயமாக, இனக்குழுக்களாக வாழ்ந்தனர். அப்போது பெண்கள் தலைமை ஏற்றிருந்தனர். காலப் போக் கில் சமுதாயத்தில் மாறுதல் ஏற்பட்டு தனிச்சொத்துடமை ஏற்பட்டபோது பெண்கள் தலைமைப் பாத்திரம் பறிக் கப்பட்டு, பெண்ணடிமைத்தனம் ஏற் பட்டது. ஆணாதிக்கப் பெண்ணடிமைத்த னத்திற்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டியுள்ளது. சோவியத் யூனியன் இருந்தபோது பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டது. எனினும் அங்கு சோசலிச சமூக அமைப்பு தகர்க் கப்பட்ட பின்பு, மீண்டும் ஆணாதிக்க பெண்ணடிமைத்தனம் தலை தூக்கி யது. எனவே பெண்ணடிமைத்தனத் திற்கு எதிராக நடத்த வேண்டிய போராட் டம் மிக நெடியது. பண்பாட்டுரீதியாக வும் விடாப்பிடியாக தொடர்ந்து இப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தாராளமய பொருளாதார காலகட்டத்தில் பெண்கள் மீதான வன் முறை, சுரண்டல், ஒடுக்குமுறை அதிகரித்திருக்கிறது. பெண்களின் உழைப்புக்கு உரிய ஊதியம் கொடுக் கப்படுவதில்லை. வீடுகளில் பெண்க ளின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் இல்லை. வீடுகளைப் பொருத்தவரை ஆண்கள் முதலாளிகளாகவும், பெண் கள் தொழிலாளர்களாகவும் உள்ளனர். தமிழக அரசு வழங்கும் பெண்கள் உரி மைத் தொகை என்பது சரியானது. சமு தாயத்தில் சரி பாதியாக இருக்கும் பெண்களின் உரிமைக்கான போராட் டத்தை இணைத்து நடத்தும்போதுதான் சமூக மாற்றம் ஏற்படும். அதேபோல் சாதிய கட்டமைப்பு என் பது உலகில் வேறெங்கும் இல்லாதது. இந்தியாவில் மட்டும் இருக்கக்கூடிய முறையாகும். இந்திய சமூக அமைப் பைப் பற்றி ஆய்வு செய்த இஎம்எஸ் நம்பூதிரிபாட் போன்ற மார்க்சிய அறி ஞர்கள் சாதி, மதத்திற்கு எதிரான போராட்டம் என்பது உழைக்கும் மக்கள் விடுதலைக்கு அவசியமானது என்று தெளிவாகக் கூறினர்.
தாராளமய கொள் கைகளைத் தீவிரமாக அமல்படுத்தும் பாஜக ஆட்சிக் காலத்தில் பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட சமூகரீ தியாக ஒடுக்கப்பட்டவர்கள் மீதான தாக் குதல் அதிகரித்திருக்கிறது. இதற்கு எதி ராக, ஜனநாயக எண்ணம் கொண்ட அனைத்துத் தரப்பினர் ஒன்றிணைந்து போராட வேண்டும். இதன்மூலம் அடிப் படை மாற்றம் காண முடியும் என்றும் பி. சுகந்தி கூறினார். வல்லமையைக் கைவிட்ட மோடி அரசு பத்து நாள் தொடர் வகுப்பின் ஏழாம் நாள் அமர்வில் ஏகாதிபத்தி யத்தின் இளைய பங்காளியாய்… என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் முன் னாள் மாவட்டக்குழு உறுப்பினர் அ. நிசார் அகமது உரையாற்றினார். அப் போது அவர் கூறுகையில், இந்தியா வின் வெளியுறவுக் கொள்கையில் பாரதிய ஜனதா அரசு மிக மோசமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு காலத்தில் உலகில் நூற்றுக்கும் மேற் பட்ட வளர்முக நாடுகளை ஒன்று சேர்த்து அணிசேரா நாடுகள் என்று தனி அமைப்பை உருவாக்கி, தலைமை ஏற்ற இந்தியா இப்போது அந்த அமைப்பை கைவிட்டு விட்டது. அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் இளைய பங்காளியாய்… என்று சொல்வதை விட, அமெரிக்கா வுக்கு கீழ்படிந்து செல்லும் தாழ்வான நிலைக்குப் போய்விட்டது. தனது வல் லமை மிக்க வெளியுறவுக் கொள்கை யைக் கைவிட்டு, அமெரிக்கா, இஸ் ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் இணக்க மாகச் செயல்படும் அணுகுமுறையை மோடி அரசு பின்பற்றுகிறது. இது இந்தியாவுக்கு நீண்ட கால அடிப்படை யில் தீங்கு இழைக்கக்கூடியதாக மாறி யுள்ளது, என்று நிசார் அகமது கூறி னார்.