தாராபுரம், டிச.30- தாராபுரம் அருகே பாலியல் வன்புணர்வுக் குள்ளான தலித் சிறுமி கருக்கலைப்பு விவ காரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந் தவர் ராஜேந்திரன் (67). இவருக்கு சொந்த மான தோட்டத்தில் ஒரு பெண் வேலை செய்து வந்துள்ளார். அந்த பெண் வேலைக்கு செல் லும்போது தனது 16 வயது மகளையும் உடன் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில், ராஜேந்திரன் அந்த சிறுமியிடம் பாலியல் அத் துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதையடுத்து ராஜேந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து, தாராபுரம் அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் உஷாராணியிடம் பணம் கொடுத்து சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய வேண்டும் எனத்தெரிவித்துள்ளனர். பணத்தை பெற்றுக்கொண்ட உஷாராணி சிறுமியின் வீட்டிற்கு சென்று கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்துள்ளார். இதனால் சிறுமியின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து தாராபுரம் அரசு மருத்துவம னைக்கு அழைத்து வந்து சிகிச்சையளித் துள்ளார். இதுகுறித்து தாராபுரம் அரசு மருத்துவ மனை நிர்வாகம் திருப்பூர் மாவட்ட அரசு குழந்தைகள் நல விழிப்புணர்வு மையத்திற்கு தகவல் அளித்தனர். அவர்கள் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் புகாரளித்த னர். இதையடுத்து சிறுமியை பாலியல் வன் புணர்வுக்குள்ளாக்கிய ராஜேந்திரன், கருக் கலைப்பு செய்த செவிலியர் உஷாராணி மற் றும் அதற்கு உடந்தையாக இருந்த சுப்பிர மணி உள்ளிட்ட நான்கு பேர் மீது வன்கொ டுமை தடுப்பு சட்டம், போக்சோ உள்ளிட்ட பல் வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், உஷாராணி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறை வான சுப்பிரமணி உள்ளிட்ட இருவரை போலீ சார் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள் ளார். இச்சம்பவம் குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி. கே.கனகராஜ் தலைமையில் சிபிஎம் தாலூ காச் செயலாளர் என்.கனகராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக்குழு உறுப்பினர் கி.மேகவர்ணன், மாதர் சங்க நிர்வாகிகள் பவித்ரா, கவிதா, பானுமதி மற்றும் ஆதித்தமி ழர் ஜனநாயக பேரவை நிர்வாகிகள் பாதிக் கப்பட்ட சிறுமியின் ஊருக்கு நேரில் சென்று, அவரின் தாயார் மற்றும் சகோதரியிடம் சம் பவம் குறித்து கேட்டறிந்தனர். இதன்பின் அவர்களுக்கு ஆறுதல் கூறினர். இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் சி.கே.கனகராஜ் கூறுகையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமி 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். மேற்கொண்டு படிக்க வசதியில் லாத காரணத்தால் தாயாருடன் வேலைக்கு சென்றுள்ளார். எனவே அந்த சிறுமிக்கு முறை யாக கவுன்சிலிங் கொடுப்பதோடு மேற் கொண்டு கல்வியை தொடர மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இச்சம்பவத்திற்கு உடந்தை யாக இருந்து தலைமறைவாக உள்ள குற்ற வாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும் பம் தொடர்ந்து சொந்த ஊரில் வசிக்க முடி யாது. எனவே, வேறு பகுதியில் வசிக்க அரசு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங் கப்படும் உதவித்தொகையை காலதாமத மில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.