கோவை, ஜன. 29- ஒண்டிபுதூர் ராமச்சந்திரா நாயுடு சாலையில் அமைந்துள்ள கடவு எண் 3ல் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி குடியிருப்போர் நலச்சங்கங்களின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட் டது. குடியிருப்போர் நலச்சங்கங்களின் ஒருங் கிணைப்பாளர் வி.தெய்வேந்திரன் தலைமை யில் ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ஒண்டி புதூர் ராமச்சந்திரா நாயுடு சாலையில் கடவு எண் 3ல் ரயில்வே மேம்பாலம் அமைக்க 2011 ஆம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப் பட்டது. ஆனால், மேம்பாலம் கட்டுவதற்கு பதிலாக, கோவை மாநகராட்சி சார்பில் 2014ல் தரைப்பாலம் கட்டுவதற்கு தீர்மானம் போடப் பட்டது. இதனை எதிர்த்து பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம். இதன்தொடர்ச்சியாக, பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி, கடவு எண் 3இல் மேம்பாலம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் முன்முயற்சி எடுக்க வேண்டும் என மனு அளிக்க வந்துள்ளதாக தெரிவித்தனர். முன்னதாக, மனு அளிக்கும் நிகழ்வில், குடியிருப்போர் நல சங்கத் தலைவர் சொக் கலிங்கம், செயலாளர் எஸ்.சுப்பிரமணி உள் ளிட்ட திரளான குடியிருப்போர் நல சங்கத் தினர் கலந்து கொண்டனர். மேலும், கடவு எண் மூன்றில் மேம்பாலம் கட்டுவதற்கான அரசா ணையை ரத்து செய்த தமிழ்நாடு அரசை கண்டித்து பிப். 7 ஆம் தேதியன்று அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றும் போராட் டம் நடைபெறும் என குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் தெரிவித்தனர்.