districts

img

நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம் - விதொச

ஆனைமலை, நவ. 27-  கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை, நகரப்புறத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும் என விதொச மாநாடு வலியுறுத்தியுள்ளது.  அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின், ஆனைமலை தாலூகா மாநாடு, வேட்டைக்காரன்புதூரில், கே.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில், விதொச மாவட்ட செயலாளர் ஏ.துரைசாமி, மாவட்ட பொருளாளர் கே.மகாலிங்கம் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத் திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண் டும். நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத் தையும் செயல்படுத்த வேண்டும். வேலை நாட்களை 200 நாட்களாகவும், தினக்கூலி ரூ600 ஆக உயர்த்த  வேண்டும், வேலை  அட்டை பெற்றவர்களுக்கு வேலை உத்தர வாதம், வார இறுதியில் ஊதியம் ஆகிய வற்றை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  ஆனைமலை தாலூகா தலைவராக பி.பழ னிச்சாமி, செயலாளராக பி.பி.மகேந்திரன், பொருளாளராக ‌எ.முத்துசாமி  உள்ளிட்ட 15  பேர் கொண்ட புதிய தாலுகாகுழு அமைக்கப் பட்டது. முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா மறை விற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. முடி வில், தாலுகா துணைத்தலைவர் ஆர். ராம லிங்கம் நன்றி கூறினார்.