districts

img

அவுட்சோர்சிங் தொழிலாளர்கள் உரிமைகளை நிலைநாட்டுக

திருப்பூர், ஆக.1- திருப்பூர் மாநகராட்சியில் அவுட் சோர்சிங் விடப்பட்ட திடக்கழிவு மேலாண்மை பணியில் ஒப்பந்த தொழி லாளர்களின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. அவுட்சோர்சிங் ஒப்பந்த நிறுவனங் கள் ஒப்பந்த தொழிலாளர் சட்டங்களை முழுமையாக மதிக்க வேண்டும். அவர் களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும். நீண்ட காலம் வேலை செய்த ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்த ரம் செய்ய வேண்டும். தொழிலாளர் களின் இஎஸ், ஐபிஎப் பிடித்தம் செய்வ தற்கு உரிய ரசீதுகளை வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவல கம் எதிரில் திங்களன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சம்மேளனக் குழு உறுப்பினர் சங்கர் குமார் தலைமை ஏற்றார். இந்த ஆர்ப் பாட்டத்தில் சிஐடியு மற்றும் எல்பிஎப் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் பெருந்திரளானோர் கலந்து கொண் டனர். முடிவில், மாநகராட்சி மேயர் ந. தினேஷ்குமார், மாநகராட்சி ஆணை யாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகி யோரை சந்தித்து கோரிக்கை மனுக் கள் அளித்தனர். இந்த இயக்கத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ், மாநகராட்சி சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங்க நிர்வாகிகள் வாஞ்சிநா தன், நாகராஜ், ராமமூர்த்தி, ஜெகநாதன் மற்றும் எல்பிஎப் செயலாளர் ரெங்க சாமி, ஆறுமுகம் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.