தருமபுரி, டிச.16- தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட் டது பூதனஅள்ளி ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட வனப் பகுதியில் பல வருடங்களாக கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் வெடி வைத்து பாறைகளை தகர்த்து, பவுடர் மற்றும் கற்களை விற்பனை செய்து வரு கின்றனர். அவ்வாறு விற்பனைக்காக டிப்பர்கள் மூலம் வெளி யில் கொண்டு செல்லும் பொழுது, கிராம பகுதியில் அமைக் கப்பட்டுள்ள சாலைகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளன. மேலும், பாறைகளுக்கு வெடி வைப்பதற் காக வெளியில் இருந்து வாங்கி வரும் அதிக திறன் கொண்ட வெடி மருந்துகளை அதிகளவில் கல்குவாரியில் வேலை செய்யும் பணியாளர்கள் தங்கியிருக்கும் அறையிலேயே வைப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதன் காரண மாக எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்படவும் வாய்ப் புள்ளது. வெடி விபத்து ஏற்படும் போது சுற்றி உள்ள கிராம பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. மேலும், வெடி வைக்க முறையாக பயிற்சி பெறாத நபர்களை வைத்து வெடி வைக்கப்படுகிறது. இது போன்ற கல்குவாரிகளில் வெடி மருந்துகளை முறையாக பாதுகாப்பான இடங்களில் வைக்காமல் அலட்சியமாக கூலி ஆட்கள் தங்கும் இடத்திலேயே வைக்கும் கல்குவாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.