districts

img

குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயம் செய்திடுக

சேலம், ஏப்.16- ஒன்றிய மோடி அரசின் துரோ கத்தை எதிர்த்தும், குறைந்தபட்ச ஆதாரவிலையை நிர்ணயம் செய் திடக்கோரியும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் சார்பில் மேச்சேரியில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி யின் சேலம் மாவட்ட ஒருங்கி ணைப்புக் குழுக் கூட்டம் மேச்சேரி யில் கே.மாது தலைமையில் நடை பெற்றது. இதில் ஒருங்கிணைப் பாளரும், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின மாவட்ட செயலாள ருமான ஏ.ராமமூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் பி.தங்கவேலு,  சிபிஐ தவிச மாவட்ட செயலாளர் என்கே.செல்வராஜ், மாவட்ட தலைவர் சின்னத்தம்பி, சிபிஎம் மேச்சேரி  சிறப்புநிலை பேரூராட்சி கவுன்சிலர் ஆர்.பழனி மற்றும் ஒருங் கிணைப்பு குழுவின் நிர்வாகிகள் கேசி.வைத்தியலிங்கம், காத்தமுத்து,  எம்.ரத்தினவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயக்குழு அமைத் திட வேண்டும். போராடிய விவசாயி கள் மீது போடப்பட்ட அனைத்து வழக் குகளையும் திரும்ப பெற வேண்டும். போராட்டத்தில் உயிர்நீத்த 714 தியாகி களுக்கு நினைவிடம் அமைப்பது டன்,  அவர்தம் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என் பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி ஆதரவு திரட்டினர்.