districts

img

சுங்கச்சாவடி முற்றுகை: வாலிபர் சங்கத்தினர் ஆவேசம்

கோவை, செப்.1- ஒன்றிய பாஜக அரசின் சுங்கச்சாவடி ஊழலை கண்டித்து கோவையில் இந்திய  ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், கணியூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அனை வரையும் போலீசார் கைது செய்தனர்.  நாடு முழுவதும் உள்ள 600 சுங்கச்சாவடி களில் ஐந்து சுங்கச்சாவடிகளில் மட்டும் சுமார் ரூ.100 கோடி அளவிற்கு முறைகேடு நடை பெற்றது. இதுகுறித்து சிஏஜி தனது அறிக்கை யில் அம்பலப்படுத்தியுள்ளது. இந்த முறை கேடு தொடர்பாக வெளிப்படையான விசா ரணை நடத்த வேண்டும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மோடி அரசின் இந்த ஊழல் நடவடிக்கையை கண் டித்து மாநிலம் முழுவதும் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போரட்டத்திற்கு வாலிபர் சங்க மாநிலக்குழு அறைகூவல் விடுத்தது. இதன்தொடர்ச்சியாக, கோவை கருமத் தம்பட்டி அடுத்த கணியூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு வாலிபர் சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். கோவை மாவட்டச் செய லாளர் அர்ஜூன், பொருளாளர் தினேஷ்ராஜா உள்ளிட்ட கோவை, திருப்பூர் மாவட்டங் களைச் சேர்ந்த திரளான இளைஞர்கள் பங் கேற்றனர். முன்னதாக, ஒன்றிய பாஜக அர சின் சுங்கச்சாவடி ஊழலை கண்டித்தும், சுங்கச் சாவடி கட்டண உயர்வை கண்டித்தும், பிரத மர் மோடியை பதவி விலக வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பியபடியே சுங்கச்சாவடியை நோக்கி ஊர்வலமாக சென்றனர். இதனையடுத்து, காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். இதனால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  பின்னர்  சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட போராட் டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று பேருந்தில் ஏற்றினர். இதனால் கணியூர் சுங்கச் சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட் டது.