சேலம், மார்ச் 12- எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஒன்றிய அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை, வெறுமனே தேர்தலுக் காக கண் துடைப்பு செய்துள்ளதாக தமிழக மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் குற்றம்சாட்டி னார். சேலம் அம்மாபேட்டையில் ரூ.43 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை கட்டிடத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தருமபுரியில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்திருந்தார். சேலம் அம்மாபேட்டையில் நடந்த இந்த விழாவில் அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர், சேலம் அம்மாபேட்டையில் ரூ. 42 கோடி மதிப்பில் ஜப்பான் கூட்டுறவு முனையம் மூலம், புதிய மருத்துவ மனைக் கட்டிடம் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இங்கு 74 படுகைகள், 20 தீவிர சிகிச்சை படுக்கைகள் உள் ளது. மூன்று அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் அதிந வீன தொழில்நுட்ப வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இது தவிர பத்து டயலாஸிஸ் இயந்திரங்களும் உள்ளது. அதேபோல், மேட்டூரில் ஒருங்கிணைந்த ஆய்வுக்கூடம் ரூபாய் ஒரு கோடியில் திறக்கப்பட்டுள்ளது. சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், புற்றுநோயை துல்லியமாக கண்டறியும் கருவி ஏற்கனவே திறந்து வைக் கப்பட்டுள்ளது. லேப்ராஸ்கோப் கருவியும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் 35 அரசு மருத்துவமனைகள் கட்ட திட்டமிடப்பட்டு, தற்போது 28 அரசு மருத்துவமனைகள் பயன்பாட்டிற்கு கொண்டுவ ரப்பட்டுள்ளது. மீதி கட்டிடங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளது என்றார். இதனைத்தொடர்ந்து, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, காவிரி கூட்டு க் குடிநீர் திட்டத்திற்கு, ஜப்பான் கூட்டுறவு நிதியம் மூலம் கடன் பெறப்பட்டிருந்தது. இதுபோல மெட்ரோ ரயில் திட்டத்திற் கும் கடன் பெறப்பட்டது. இந்த நிறுவனம் படிப் படியாக தான் கடன் வழங்கும். இது தவிர அவர்கள் கண்காணிக்க வும் செய்வார்கள். ஆனால், எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட ஒன்றிய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்போது வெறு மனே அரசியல் ஆதாயத்திற்காக கண் துடைப்பு நிகழ்ச் சியை நடத்தியுள்ளதாக தெரிவித்தார். இச்சந்திப்பின் போது, மாவட்ட ஆட்சியர், அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் உடனிருந்தனர்.