திருப்பூர், பிப்.2- -வே.தூயவன் ஒன்றிய பாரதிய ஜனதா அரசு தாக்கல் செய் திருக்கும் பட்ஜெட் பின்னலாடைத் தொழில் துறையினருக்கு எந்தவித சலுகையோ, நிவார ணமோ அளிக்காதது ஏமாற்றம் அளித்திருப்ப தாக பின்னலாடை தொழில் துறையினர் கூறியி ருக்கின்றனர். வழக்கம் போல் ஏற்றுமதியாளர் சங்கம், சைமா உள்ளிட்ட சங்கங்கள் மட்டும் சம்பிரதாயப்பூர்வமாக வரவேற்பு தெரிவித் துள்ளன. இந்த சங்கங்கள் மட்டும் இதுபோல் ஒப்புக்கு வரவேற்று கருத்துத் தெரிவித்துள்ள போதும், இந்த தொழிலைச் சார்ந்து இயங்கக் கூடிய சாய ஆலை சங்கம், பிரிண்டிங், அட்டை பெட்டி தயாரிப்பாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இந்த பட்ஜெட்டில் எந்த சாதகமான அம்சமும் இல்லை என்று ஏமாற்றம் தெரிவித் துள்ளன. ஏற்றுமதியாளர் சங்கம் கூட, வட்டி மானியத் திட்டத்தை நீடிப்பு செய்திருப்பதை வரவேற்ப தாகக் கூறியுள்ளபோதும், வேறு குறிப்பான அம்சம் எதையும் சுட்டிக்காட்டவில்லை. சைமா சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தொழிலுக்கு என்று பட்ஜெட்டில் குறிப்பாக எதை யும் சுட்டிக்காட்ட முடியாமல், பொதுவான வெவ் வேறு அம்சங்களைப் பட்டியலிட்டு வரவேற்ப தாக சுருக்கமாகக் கூறியுள்ளது. மௌன மொழியின் அர்த்தம் அதேசமயம் பல சங்கங்கள் வெளிப்படை யாக வரவேற்கவோ, விமர்சித்துக் கருத்துத் தெரிவிக்கவோ இல்லாமல் ஒதுங்கி இருப்பது, இந்த பட்ஜெட்டில் சாதக அம்சம் என்று எதுவும் இல்லை, அதேசமயம் ஏதேனும் விமர்சித்து கருத்து சொல்லி என்ன பலன் கிடைத்துவிடப் போகிறது என்ற விரக்தியிலும், வேறு சிலர் ஏதே னும் எதிர்க்கருத்துச் சொன்னால் மறைமுகமா கவோ, நேரடியாகவோ ஒன்றிய ஆட்சியாளர்க ளின் பழி வாங்கல் நடவடிக்கைக்கு ஆளாகக் கூடும் என்றும் மௌனம் காப்பதை உணர்த்துவ தாக உள்ளது.
10 ஆண்டுகளின் தொடர் தாக்குதல்
ஒன்றிய பாரதிய ஜனதா அரசு பொறுப் பேற்ற 2014ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டு காலமாக திருப்பூர் பின்னலாடைத் தொழில் அடி மேல் அடி வாங்கி வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடி 2016ஆம் ஆண்டு நவம்பரில் அறிவித்த ரூ.500, ரூ.1000 பணத்தாள்கள் செல்லாது என்ற அறிவிப்பு மற்ற பல சிறு, குறு தொழில்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது போலவே திருப்பூர் பின் னலாடைத் தொழிலுக்குப் பேரிடியாக அமைந் தது. அதற்கடுத்து ஜிஎஸ்டி வரி நடைமுறை அம லாக்கப்பட்டதும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் துறையினருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீளவே முடியாத நிலையில் சிக்கித் தவித்தபோது இந்த வரிமுறை அம லாக்கப்பட்டது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சு வதாக அமைந்தது. அதற்கடுத்து பஞ்சு, நூல் விலை உயர்வு, வர லாறு காணாத அளவுக்கு ஏறக்குறைய 90 சத விகிதத்திற்கு மேல் அதிகரித்தபோது தொழில் துறையில் தத்தளித்து வந்த ஆயிரக்கணக்கான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தாக் குப் பிடிக்க முடியாமல் தொழிலை விட்டே வெளி யேறும் நிலை வந்தது. அதற்கடுத்து கொரோனா பொது முடக்கம், அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டு சந்தைகளில் விற்பனை சரிந்ததால் இங்கிருந்து செல்லும் ஏற்றுமதி அளவு கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்படி ஒன்றன் பின் ஒன்றாக தாக்குதல்கள் ஏவப்பட்டதால் மொத்த ஜவுளித் தொழில் துறை யுமே கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவ னங்கள் ஏறத்தாழ 40 சதவிகிதம் அளவு காணா மல் போனது. இத்துடன் மின் கட்டணம், மின் நிலைக் கட்டணம் உயர்வும் அதிகளவில் பாதிப்பை அதிகப்படுத்தியது.
பாஜக அரசின் கொள்கை
சிறு, குறு, நடுத்தரத் தொழில்களுக்கு பாது காப்பு தருவதோ, சலுகை தந்து ஊக்கப் படுத்துவதோ இந்த அரசின் கொள்கையாக இல்லை. மாறாக ரிலையன்ஸ், ஆதித்ய பிர்லா குழுமம் உள்ளிட்ட மிகப்பெரும் கார்ப்பரேட் நிறு வனங்கள் இந்த தொழிலைக் கைப்பற்றவும், ஏற்கெனவே பின்னலாடை உற்பத்தித் தொழி லில் இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய மிகப் பெரும் நிறுவனங்கள் கார்ப்பரேட் நிறுவனங் களாக மாறுவதற்கும் மட்டுமே பாஜக அரசு ஆதரவளித்து சலுகை காட்டி வருகிறது. எனவேதான் பட்ஜெட்டில் பொதுவாக சிறு, குறு நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கோ அல்லது குறிப்பாக ஜவுளித் துறை சார்ந்த சிறு, குறு தொழில் துறையினருக்கோ எநத ஆத ரவோ, சலுகையோ காட்டவில்லை.
மறக்க முடியுமா?
11 ஆண்டுகளுக்கு முன்பு 2013 ஆம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டு திருச்சிக்கு வந்தபோது திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் மட்டுமின்றி, விசைத்தறி ஜவுளித் துறையினரும் சேர்ந்து கொண்டு “மாற்றம் நிகழ்த்த வந்த தலைவர்” என்று கொண் டாடினர். தன்னை சந்தித்த தொழில் துறையினரி டம் 2020ஆம் ஆண்டுக்குள் ரூ.1லட்சம் கோடி யாக பின்னலாடை வர்த்தகத்தை எட்டுவதற் கான திட்டங்களைத் தாருங்கள், நான் நிறை வேற்றித் தருகிறேன் என்று மோடி கூறியதாக இங்குள்ள தொழில் துறையினர் புளகாங்கிதம் அடைந்து அவரை துதி பாடினர். “தீர்க்கதரி சனம் மிக்கத் தலைவர்” என்று ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளினர். ஆனால் 10 ஆண்டு காலத்தில், இப்போது என்ன நடந்திருக்கிறது என்பதை நேரில் பார்த்த பிறகும், சொந்தமாக அனுபவித்த பிறகும், உண்மையான நிலையை வெளிப்படையாகச் சொல்வதற்குத் துணிவின்றி அமைதி காக்கின்ற னர். ஆனால் இத்தொழிலில் கீழ்நிலையில் இருக் கும் சிறு, குறு தொழில் துறையினர் வேதனையு டன், இந்த ஆட்சியாளர்களுக்குத் தக்க பாடம் புகட்ட மனக்குமுறலுடன் காத்திருக்கின்றனர் என்பதே உண்மை நிலையாகும்.