திருப்பூர், ஆக. 3 - திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்த, யு.கே.ஜி. படிக்கும் சிறுமி இனியா ஐந்து நிமிடங்களில் நூறு திருக் குறள்களை ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். இதற்காக சிறுமி இனியாவுக்கு பல அமைப்புகள் சார்பில் சான்றிதழ்கள், விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. புதனன்று அவரது பெற் றோர் மற்றும் திருப்பூர் 11ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ்.செல்வராஜ் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜை மாணவி இனியா சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.