திருப்பூர், நவ. 7 - உடுமலைபேட்டை வட்டம் திருமூர்த்தி மலையில் நவம்பர் புரட்சி தினத்தை மலைவாழ் மக்கள் எழுச்சியோடு கொண் டாடினர். திருமூர்த்திமலை செட்டில் மெண்டில் தளி பேரூராட்சி மன்ற உறுப்பினர் வாணீஸ்வரி தலைமையில் கட்சி உறுப்பி னர் சாந்தி செங்கொடியை ஏற்றி வைத்தார். இந்த கொடி யேற்று விழாவில் கட்சிக் கிளைச் செயலாளர் செந்தில் குமார், மணிகண்டன், ஆனந் தன் மற்றும் கேரள மாநில வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த மணி உள்பட கட்சி உறுப் பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.