districts

img

உடுமலை நாராயணகவி பிறந்தநாள்: மாவட்ட ஆட்சியர் மரியாதை

உடுமலை, செப்.25- பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராய ணகவி  பிறந்தநாளை முன்னிட்டு  அவரது திரு வுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ்  மாலை அணிவித்து மலர்த்தூவி  மரியாதை செலுத்தினார். பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராய ணகவி  பிறந்தநாளை முன்னிட்டு செப். 25ஆம் தேதி திங்கட்கிழமை, உடுமலைப்பேட் டையில்  பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி நினைவு மண்டபத்தில் அவரு டைய திருவுருவச் சிலைக்கு பலரும் மாலை  அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி னார்கள். இவ்விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் கூறுகையில், உடுமலை நாராயணகவி பொது உடமை, சமத்துவம், பெண் விடுதலை, சுயமரியாதை போன்ற முற்போற்கு சிந்தனைகளை பெரியாரிடம் கற்றறிந்தார். விடுதலை போராட்டத்தின் போது, தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழுங்கியவர் ஆவார். 75 திரைப்படங்களுக்கு மேல் பாடல்களை எழுதியுள்ளார். இவர் தமது முதுமை காலத்தில் தனது சொந்த ஊரான பூளவாடி கிராமத்தில் 1981 ஆம் ஆண்டு மே23 ஆம் தேதி காலமானார் என்று தெரி வித்தார்.  இந்த விழாவில், உதவி ஆட்சியர் (பயிற்சி) கிருத்திகா, எஸ்.விஜயன்,  உடு மலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், உடுமலை நகர்மன்றத் தலைவர்  மத்தின், உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழுத்  தலைவர் மகாலட்சுமி முருகன், அரசு அலு வலர்கள், பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவியின் வாரிசுதாரர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.