உடுமலை, டிச.23- உடுமலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி யில் வியாழனன்று கதை செல்லும் நிகழ்வு நடை பெற்றது. பேரிடர் காலகட்டத் துக்குப் பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களை தயார்படுத்துவதற்காக புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உடுமலை, இராகல் பாவி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வியாழனன்று கதை சொல்லும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் சாவித்திரி தலை மையில் நடைபெற்றது. மேலும், பள்ளி நூல கத்திற்கு மாணவர்கள் ஆர்வத்தோடு வருகை புரிந்து படிக்கும் வகையில் 50க்கும் மேற் பட்ட சிறார் கதைப்புத்தகங்கள் வழங்கப் பட்டது. இதைத்தொடர்ந்து கதைசொல்லி பூங்கொடிக்கு இராகல்பாவி ஊராட்சி மன்ற தலைவி சுமதி செழியன் பொன்னாடை அணி வித்து நினைவுப் பரிசினை வழங்கினார்.