சென்னை, மார்ச் 10- பெண்களின் முன்னேற்றத்தை தடுக்கும் ஒன்றிய அரசின் பிற்போக்கு கொள்கைகளை கருத்தியல் ரீதியாக எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என சென்னையில் நடைபெற்ற மணியம்மை பிறந்தநாள் விழாவில் உ.வாசுகி அறைகூவல் விடுத்தார். அன்னை ஈ.வெ.ரா. மணியம்மை 103ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் பெரியார் திடலில் வியா ழனன்று (மார்ச் 10) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பேசுகையில், மணியம்மை என்றால் அது பெரியா ரின் மனைவி, அவருக்கு உறுதுணை யாக இருந்தவர் என்பதுதான் பலருக் குத் தெரியும். ஆனால் அவரிடம் இருந்த தொலைநோக்கு பார்வை, பன் முகத் திறன்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். திராவிடர் கழகத்தின் தலைவராக பொறுப்பேற் பது என்பது சாதாரண விஷயமல்ல.
என்னதான் சமத்துவம் பேசினாலும் ஒரு பெண்ணை தலைமை பொறுப் புக்கு கொண்டு வருவது என்பது கடி னம். ஆனால் அந்த இயக்கம் மணியம் மையை தலைமை பொறுப்புக்கு கொண்டு வந்தது. அதற்கு முற்றிலும் தகுதி பெற்றவராக அவர் இருந்தார். அவர் சிறந்த எழுத்தாளராக, பேச்சா ளராக, அமைப்பாளராக திகழ்ந்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சராக வேண்டும் உள்ளிட்ட என்னற்ற போராட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கி வழிநடத்தி இருக்கிறார், கைதாகி இருக்கிறார். அவர் குடியரசு பத்திரிகையில் எழு திய ஒரு கட்டுரைக்காக அவருக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட போது, நான் எழுதியதில் ஒரு எழுத்தை கூட மாற்ற மாட்டேன், ஏனென்றால் அது உண்மை. எனவே நான் அபரா தம் செலுத்த மாட்டேன் என்று சொன் னதால், 15 நாட்கள் சிறைவாசம் அனு பவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்படி அவர் தான் ஏற்றுக் கொண்ட கொள்கையில் அசைக்க முடியாத நம் பிக்கை வைத்திருந்தார், இப்படி அவர் தனித்துவம் மிக்க பல குணாம்சங் களை கொண்டிருந்தார். சமூகத்தில் வேரூன்றி நிலவிக் கொண்டிருக்கும் பிற்போக்கான, ஆணாதிக்க, சாதிய, மதவெறி கருத் துக்களுக்கு எதிராக, பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், ஆண் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற பண்பாட்டு களச் சூழலுக்கு எதிராக போராட வேண்டி யுள்ளது.
அரசியல் தாக்கத்தை ஏற் படுத்திய பெண் தலைவர்களைக் கொண்ட இயக்கம் என்றால் அது திரா விட இயக்கமும், கம்யூனிஸ்ட் இயக்க மும்தான். அன்னை நாகம்மாள், கண் ணம்மாள், குஞ்சுதம்மாள் போன்ற எண்ணற்ற மிகப்பெரிய பெண் ஆளு மைகள் தமிழகத்தில் இருந்தனர். சட்டமன்றத்திலே தேவதாசி முறைக்கு எதிராக முத்துலட்சுமி ரெட்டி சத்தியமூர்த்தியை எதிர்த்து பேசியது மிகப்பெரிய வரலாறு. தேவதாசி முறை ரத்து செய்யப்பட்டால் இந்து கலாச்சாரம் கெட்டு விடும் என்றெல் லாம் கூறினார்கள். உடனே முத்துலட் சுமி ரெட்டி தேவதாசி முறை இருந்தால் தான் கலாச்சாரம் பாதுகாக்கப்படுமா? சரி அப்படியென்றால், எங்களது இனப் பெண்கள் நீண்ட காலமாக இந்த கலாச்சாரத்தை பாதுகாத்து விட் டனர். ஒரு மாறுதலுக்கு உங்களது இனப் பெண்களை இந்த கலாச்சா ரத்தை பாதுகாக்க முன்நிறுத்தலாமே என்று துணிச்சலாக கேட்டவர் முத்து லட்சுமி ரெட்டி. அதேபோல், பெண்களுக்கான பல வரம்புகளை உடைத்தவர் கம்யூனிச இயக்கத்தை சேர்ந்த கே.பி.ஜானகி யம்மாள். ஆண்கள் மட்டுமே ஏர் உழுத அந்த காலகட்டத்தில்,
மதுரையிலே களத்தில் இறங்கி நிலப்பிரப்புக ளுக்கு எதிராக ஏர் உழுதார். மதுரை யில் பல கிராமங்களில் அந்த தலை முறையில் பிறந்த பல பெண்களுக்கு ஜானகி என பெயர் சூட்டப்பட்டிருந் ததை சுட்டிக் காட்டினார் வாசுகி. நாடக அரங்கில் தலித் நாடக கலைஞர்க ளோடு இதர சாதிகளை சேர்ந்த பெண் கள் பெண் வேடமிட்டு நடிக்க மாட் டார்கள். அப்படிப்பட்ட சாதிய சூழல் மேலோங்கி இருந்த நிலையில், விஸ்வ நாததாசோடு ஜானகியம்மாள் பெண் வேடமிட்டு நடித்தார். தவறுகளை தவறு என சுட்டிக்காட்டக் கூடிய வாழ் வியலை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பெண்கள் சமூகத்தில் சாதிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு கல்வி, பொருளாதார மேம்பாடு, வேலைவாய்ப்பு இவையெல்லாம் தேவை. பல்வேறு பிற்போக்கு சித் தாந்தங்களை எதிர்த்து பிரச்சாரம் செய் வதற்காக கருணாநிதி முதல்வராக இருந்த போது சமூக சீர்திருத்தத்துறை என்ற ஒன்று கொண்டுவரப்பட்டது.
அந்த துறை மீண்டும் மீட்டெடுக்கப் பட வேண்டும், ஏனென்றால் பெண்க ளுக்கு எதிரான கருத்துக்கள் வலுப் பெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சூழ லில், கருத்தியல் களத்தில் அவற்றை எதிர்த்து வலுவான பிரச்சாரத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெ டுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசி னார். இந்நிகழ்வில் மக்களவை உறுப்பி னர் கனிமொழி கருணாநிதி, வழக்கறி ஞர் அ.அருள்மொழி, திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் ச.இன்பக் கனி ஆகியோரும் பேசினர். முன்ன தாக “பெரியார் மணியம்மை திரும ணம் ஒரு வரலாற்று உண்மை விளக் கம்” என்ற நூலை கி.வீரமணி வெளி யிட கனிமொழியும், உ.வாசுகியும் பெற் றுக் கொண்டனர். பா.மணியம்மை வர வேற்றார். க.அன்புமணி நன்றி கூறி னார்.