districts

img

பாலக்கோடு சர்க்கரை ஆலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின் அரவை துவக்கம்

தருமபுரி, மார்ச் 7- பாலக்கோட்டில் உள்ள தரும புரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அரவையை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி துவக்கி வைத்தார். பாலக்கோட்டில் உள்ள தரும புரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை  ஆலையில், இரண்டு ஆண்டுக ளுக்கு பின் அரவையை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி துவக்கி வைத்தார். இதில், தருமபுரி மாவட்ட  கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் அ.சங்கர், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி.செந்தில்குமார், சட்ட மன்ற உறுப்பினர்கள் பாலக்கோடு கே.பி.அன்பழகன், பென்னாகரம் ஜி.கேமணி, பாப்பிரெட்டிப்பட்டி ஆர்.கோவிந்தசாமி மற்றும்  விவசா யிகள் சங்க பிரதிநிகள்‌ பலர் பங் கேற்றனர். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க் கரை ஆலையில் 2021-22 அரவைப்  பருவத்திற்கு 3,422 ஏக்கர் கரும்பு  பதிவு செய்து சுமார் 1.02 மெ.டன்கள் கரும்பு அரவை மேற்கொள்ளப்பட உள்ளது. 1.03 லட்சம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்யவும், இணை மின் நிலையத்தின் மூலம் ஆலை அரவைப் பருவத்தில் தின சரி 9.31 மெகா வாட் மின்சாரம் உற் பத்தி செய்யப்பட உள்ளது. உற் பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 3.02 மெகா வாட் மின்சாரம் ஆலை  பயன்பாட்டிற்கு போக, மீதமுள்ள 6.24 மெகாவாட் மின்சாரம் தமிழ் நாடு மின்சார வாரியத்திற்கு வழங்க வும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது என ச.திவ்யதர்சினி தெரி வித்தார்.