districts

img

தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி

தாராபுரம், மே 2 - தாராபுரத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு,  இரு  சக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் தலைக்க வசம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஞான வேல் தொடங்கி வைத்தார். பேரணி பொள்ளாச்சி ரோடு  அமராவதி ரவுண்டானா அருகே புறப்பட்டு பொள்ளாச்சி சாலை, பூக்கடைகார்னர், பெரிய கடை வீதி, உடுமலை சாலை,  தளவாய்பட்டினம் சாலை, நான்கு வழி சாலை வழியாக அம ராவதி சிலையை மீண்டும் அடைந்தது.  பேரணியின் போது  தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி  முழக்கங்கள் எழுபப்பட்டது. மேலும், பொது மக்களுக்கு  விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.