உதகை, மார்ச் 8 – நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு புலிகள் உயி ரிழந்துள்ளன. இதனால், புலிகள் உயிரி ழந்த இடங்களில் கண்காணிப்பு கேமராக் களை பொருத்தி தீவிரமாக கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூரில் அமைந் துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி கேரளா மாநிலம் வயநாடு வன உயிரின சர ணாலயம் மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகம் என மூன்று மாநில வனப்பகுதிகளையும் ஒன் றிணைக்கும் பகுதியாக உள்ளதால், இந்த வனப்பகுதியில் புலிகளின் நடமாட்டம் அதி களவில் காணப்படுகிறது. கடந்த ஐந்து நாட்களுக்கு முன் நெலாக் கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட எடக் கோடு பகுதியில் 5 வயது பெண் புலி உயிரி ழந்தது. இது முதுமலை புலிகள் காப்பக கணக் கெடுப்பில் இதுவரை தென்படாத புலியா கும். இதனைத் தொடர்ந்து, 10 வயது ஆண் புலி ஒன்றும் உயிரிழந்தது. இரண்டு புலிகளின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்ததில், சந்தேகப் படும்படியான தடயங்கள் எதுவும் இல்லை. உடற்கூறு பாகங்கள் தடயவியல் ஆய்வுக் காக கோவை மற்றும் சென்னையில் உள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறு வனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், இரண்டு புலிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம் பவத்தின் அடிப்படையில் வன உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பக துணை இயக் குனர் வித்யா தலைமையில் புலிகள் உயிரி ழந்த இடங்களை சுற்றி தொடர்ந்து கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர மாக கண்காணிக்கும் பணியில் வனத்துறையி னர் ஈடுபட்டுள்ளனர். முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மூன்று மாநில வனப்பகுதிகளின் புலிகள் நடமாட்டம் காணப்படுகிறது. அவ்வாறு எல்லை தாண்டி வரும்போது ஒன்றோடு ஒன்று சண்டை யிட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் நடைபெறு கின்றன என்று வனத்துறையினர் கூறுகின்ற னர்.