districts

ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான இருவர் கைது

திருப்பத்தூர், டிச.28- முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் தொடர்பில் இருந்ததாக திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அதிமுக நிர்வாகிகளை நெல்லை மாவட்ட தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அதிமுக ஆட்சிக் காலத்தில் பால் வளத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த கே.டி.ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் சுமார் ரூ.3 கோடி வரை பண மோசடியில் ஈடுபட்ட தாக புகார் எழுந்துள்ளது. அதனடிப்படையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது  வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரைக்  கைது செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டது. இதனிடையே, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்  ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி  செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்யும் நடவடிக்கை யைக் காவல் துறையினர் துரிதப்படுத்தி னர். இதையறிந்த ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். இதைத் தொடர்ந்து, அவரைக் கைது  செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப் பட்டன. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதுவரை ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படவில்லை. இதைத் தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜி யுடன் நெருக்கமானவர்களிடம் தனிப் படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல் போன் எண்களைக் கொண்டு அவர் யாரிடம் பேசி வருகிறார் என்பதைக் கண்டறிந்து அவர்க ளிடம் தனிப்படை காவல்துறையினர் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அதனடிப்படையில், திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கோடியூரைச் சேர்ந்த அதிமுக இளைஞர் பாசறை நகரச் செயலாளர் ஏழுமலை (35) மற்றும் அக்ரகாரம் அதி முக தகவல் தொழில்நுட்பப் பிரிவு  துணைச் செயலாளர் விக்கி (எ) விக்னேஸ்வரன் (36) ஆகிய இருவரை யும்  டிஎஸ்பி சாந்தலிங்கம் தலைமை யிலான நெல்லை மாவட்ட தனிப்படை காவல்துறையினர் செவ்வாயன்று (டிச.28) அதிகாலை கைது செய்து விசாரணைக்காக நெல்லைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், முன்னாள் அமைச்சர் வீரமணியின் செல்போன் எண் மற்றும் அவரது உதவியாளர்கள் எண்களில் தனிப்படையால் தேடப்படும் ராஜேந்திர பாலாஜி அவ்வப்போது பேசி வருவதாகக் கூறப்படும் நிலை யில், தனிப்படை காவலர்கள் முன்னாள் அமைச்சர் வீரமணியின் செல்போன் எண்களையும் ஆய்வு செய்து வருவ தாகக் கூறப்படுகிறது.