தருமபுரி, பிப்.3- தொப்பூர் அருகே சட்டவிரோதமாக கரு விலுள்ள குழந்தையின் பாலினத்தைத் தெரி வித்த கும்பலைச் சேர்ந்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டத்தில் பரவலாக தற் காலிக முகாம்கள் அமைத்து ஒரு கும்பல் சட்ட விரோதமாக கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்தல் மற்றும் கருக் கலைப்பு ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தருமபுரி மாவட்ட ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத் துக்கு தகவல் கிடைத்தது. இதில் தரும புரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப் பூரை அடுத்த பரிகம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தற்காலிக முகாம் அமைத்து சில பெண்களுக்கு கருவிலுள்ள குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்துள் ளது தெரியவந்தது. இதையடுத்து தருமபுரி மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்கு நர் சாந்தி தலைமையில் தொப்பூர் காவல் துறையினர் அடங்கிய குழுவினர் அப்பகுதி யில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பாலக் கோடு பகுதியைச் சேர்ந்த வனிதா (35) மற்றும் அவரது சகோதரர் முருகன் (30) ஆகியோர், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வடிவேல் என்ப வருடன் இணைந்து கருவில் உள்ள பாலினத் தைக் கண்டறிந்து தெரிவித்து வந்தது உறுதி செய்யப்பட்டது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்த 13 கர்ப் பிணிகளை இச்சோதனைக்காக அழைத்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் ஓரிடத்துக்கு வரவழைத்து அங்கிருந்து காரில் பரிகம் கிராமத்துக்கு அழைத்துச் சென்றுள்ள னர். அங்கு, பாலினம் கண்டறிந்து தெரிவிக் கும் உபகரணங்களுடன் தயாராக இருந்த வடிவேல், 13 பெண்களையும் பரிசோதனை செய்து பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித் துள்ளார். இதற்கு ரூ.13 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள் ளது. பாலினம் அறிந்து கொண்டவர்களில், கருக்கலைப்பை தேர்வு செய்யும் பெண்க ளுக்கு மற்றொரு நாளில் வேறொரு இடத் தில் கருக்கலைப்பு மேற்கொள்ளவும் திட்ட மிடப்பட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஆய்வின்போது வனிதா, அவரது சகோதரரும் ஓட்டுநருமான முருகன் ஆகிய இருவரையும் காவல் துறை யினர் செய்தனர். போலீசாரைக் கண்டதும் தலைமறைவான வடிவேலை தேடி வருகின்ற னர். இதனிடையே, கருவின் பாலினத்தை அறிந்து கொள்ள வந்திருந்த கர்ப்பிணிக ளுக்கு அறிவுரை மற்றும் எச்சரிக்கை வழங்கி அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.