நாமக்கல், அக்.17- பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் இரு சடலங்கள் மீட்கப்பட்டு போலீசார் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ஆண் சடலங்கள் மிதப்பதையறிந்து, பள்ளி பாளையம் போலீசார் விசா ரணை மேற்கொண்டனர். அப்போது, சடலங் கள் கிடப்பது ஈரோடு எல்லை பகுதிக்குட்பட்ட காவிரி ஆற்றங்கரையாகும். இதனையடுத்து பள்ளிபாளையம் போலீ சார், ஈரோடு போலீசாருக்கு தகவல் தெரிவித் தனர். பள்ளிபாளையம் ஜனதா நகர் பகுதிக்கு சென்ற கருங்கல்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள், உள்ளூர் பரிசல் ஓட்டிகள் உதவியுடன் பள்ளிப் பாளையம் காவிரி பாலத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அழுகிய நிலை யில் இருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலத்தை மீட்டனர். பின்னர், பள்ளிப் பாளையம் ரயில்வே இருப்புப் பாதை பாலம் தாண்டி சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் முதியவர் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். காவிரி ஆற்றல் தொடர்ந்து நீர்வரத்து குறைந்து வரும் நிலையில், காவிரி ஆற்றில் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவமானது பள்ளிபாளையம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.