திருப்பூர், பிப்.4- கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய வார்டுகளில் போட்டி யிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இருவர் நீக்கம் செய் யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சி வார்டுகளுக்கு நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உடன்பாட்டை மீறி கூட்டணி கட்சிக்கு ஒதுக்கிய வார்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இருவர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் எம்.ரவி வெள்ளியன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியறிக்கையில் கூறியி ருப்பதாவது: நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு கண்டு கூட்டணி கட்சி களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட திருப்பூர் மாநகராட்சி வார்டுகளில் போட்டி வேட்பாளர்களாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள 17ஆவது வார்டைச் சேர்ந்த எஸ்.விஜய், 9ஆவது வார்டைச் சேர்ந்த கே.புஷ்பலதா ஆகியோர் கட்சியின் கோட்பாடுகளுக்கு விரோதமாகவும், கட்சியின் முடிவுக்கு எதிராகவும் செயல்பட்டதால் அவர்கள் இருவரும் கட்சி யிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பதை தெரிவித்துக் கொள்வதாக எம்.ரவி கூறியுள்ளார்.